ETV Bharat / state

உதகை மண்சரிவு: அடித்துச் செல்லப்பட்ட கேரட் தோட்டம்!

author img

By

Published : Aug 10, 2022, 10:10 AM IST

உதகையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரட் தோட்டம் அடித்துச் செல்லப்பட்டது.

உதகை மண்சரிவு: அடித்து செல்லப்பட்ட கேரட் தோட்டம்!
உதகை மண்சரிவு: அடித்து செல்லப்பட்ட கேரட் தோட்டம்!

நீலகிரி : உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம், மண்சரிவு, மரங்கள் வேரோடு விழுவது, மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதகை அருகே எமரால்டு லாரன்ஸ் என்ற இடத்தில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான கேரட் பயிர்கள் தாழ்வான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டன.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் மோட்டார், நீர் தெளிப்பான் உட்பட விவசாயம் சார்ந்த பொருட்களும் அடித்து செல்லப்பட்டன. எனவே சாலையோரத்தில் ஏற்பட்ட இந்த மண்சரிவின் காரணமாக, வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரி அருகே படுகர் இனமக்களை ஆதிவாசிப்பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

நீலகிரி : உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம், மண்சரிவு, மரங்கள் வேரோடு விழுவது, மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதகை அருகே எமரால்டு லாரன்ஸ் என்ற இடத்தில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான கேரட் பயிர்கள் தாழ்வான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டன.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் மோட்டார், நீர் தெளிப்பான் உட்பட விவசாயம் சார்ந்த பொருட்களும் அடித்து செல்லப்பட்டன. எனவே சாலையோரத்தில் ஏற்பட்ட இந்த மண்சரிவின் காரணமாக, வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரி அருகே படுகர் இனமக்களை ஆதிவாசிப்பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.