ETV Bharat / state

வனவிலங்கு கணக்கெடுப்புப்பணி - தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பயிற்சி - வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து உதகையில் சிறப்புப் பயிற்சி

நீலகிரி: வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு உதகையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ooty animal census training for  Forest Service staff and volunteers
ooty animal census training for Forest Service staff and volunteers
author img

By

Published : Feb 10, 2020, 7:48 PM IST

நீலகிரி மாவட்டத்தில், 60 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றைக் கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி, குந்தா, குன்னூர், பைகாரா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது.

இந்தப் பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு இன்று உதகையில் உள்ள கேர்னில் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உதகை அரசு கலைக் கல்லூரி - வனவிலங்கு உயிரியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நேரடி கணக்கெடுப்பு, மறைமுகக் கணக்கெடுப்பு, நீர் நிலைகளுக்குச் சென்று எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பின்னர், ஒரு குழுவிற்கு ஒரு வனத்துறை ஊழியர், மூன்று தன்னார்வலர்கள் என 63 குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து சிறப்புப் பயிற்சி

இந்த கணக்கெடுப்புப் பணியானது 14ஆம் தேதி மாலை வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல் முறையாக காட்டெருமைகள், யானைகளை கணக்கெடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகப் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது

நீலகிரி மாவட்டத்தில், 60 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றைக் கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி, குந்தா, குன்னூர், பைகாரா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது.

இந்தப் பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு இன்று உதகையில் உள்ள கேர்னில் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உதகை அரசு கலைக் கல்லூரி - வனவிலங்கு உயிரியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நேரடி கணக்கெடுப்பு, மறைமுகக் கணக்கெடுப்பு, நீர் நிலைகளுக்குச் சென்று எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பின்னர், ஒரு குழுவிற்கு ஒரு வனத்துறை ஊழியர், மூன்று தன்னார்வலர்கள் என 63 குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து சிறப்புப் பயிற்சி

இந்த கணக்கெடுப்புப் பணியானது 14ஆம் தேதி மாலை வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல் முறையாக காட்டெருமைகள், யானைகளை கணக்கெடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகப் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது

Intro:OotyBody:உதகை 10-02-20

நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்களுக்கு உதகையில் சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 60 சதவித வனபகுதி உள்ளது. இந்த வனபகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கள் உள்ளன. இவற்றை கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி, குந்தா, குன்னூர், பைக்காரா உள்ளிட்ட வனபகுதிகளில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது. இந்த பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இன்று உதகையில் உள்ள கேர்னில் பகுதியில் பயிற்சி அளிக்கபட்டது. இதில் உதகை அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை மணாவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நேரடி கணக்கெடுப்பு, மறைமுக கணக்கெடுப்பு, நீர் நிலைகளுக்கு சென்று எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து எடுத்துறைக்கபட்டது. பயிற்சி முநெ;த பின்னர் ஒரு குழுவிற்கு ஒரு வனத்துறை ஊழியர், 3 தன்னார்வலர்கள் என 63 குழுக்கள் பிரிக்கபட்டு அவர்களுக்கு ஒதுக்கபட்ட வனபகுதிக்கு அனுப்பி வைக்கபட்டனர். இந்த கணக்கெடுப்பு பணி 14-ந்தேதி மாலை வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல் முறையாக காட்டெருமைகள் மற்றும் யானைகளை கணக்கெடுக்க அதிக முக்கியதுவம் அளிக்கபட்டுள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி - திரு. பிரெடிட் - கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்.Conclusion:Ooty

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.