ETV Bharat / state

போக்குக் காட்டிய டி23 புலி பிடிபடுவது உறுதி

author img

By

Published : Oct 15, 2021, 6:30 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதிகளில் நான்கு பேரை அடித்துக் கொன்ற டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் 20 நாள்களாகப் போக்குக் காட்டிவந்த டி23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் செப்டம்பர் 24ஆம் தேதி வழக்கம்போல் மாடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்குப் பதுங்கியிருந்த புலி அவரைத் தாக்கியதில் தலை, முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி சந்திரன் உயிரிழந்தார்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மாடுகள், நான்கு மனிதர்களைப் புலி கொன்றுள்ளதால், அதனைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

போக்கு காட்டிய டி23 புலி
போக்குக் காட்டிய டி23 புலி

புலியைப் பிடிக்க கூண்டு

இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத் துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. தேவன் எஸ்டேட் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் 100 வனத் துறையினர் புலியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒன்பது இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ட்ரோன் கேமரா மூலமும், மரங்களின் மீது பரண் அமைத்தும் புலியின் இருப்பிடத்தைக் கண்டறிய வனத் துறையினர் முயற்சித்தனர்.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன், ராஜேஷ்குமார் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டனர். புலி நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத் துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

புலியைப் பிடிக்க முடியவில்லை

போக்கு காட்டிய டி23 புலி
போக்குக் காட்டிய டி23 புலி

ஆனால் புலியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அந்தப் புலியைச் சுட்டுக் கொல்லும்படி, முதன்மைத் தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து உத்தரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்தார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல, புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

புலியைக் கொல்ல வேண்டாம்

இந்த வழக்கு அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீலகிரியில் உலவும் டி23 புலியைக் கொல்லும் திட்டம் ஏதும் இல்லை. புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தமிழ்நாடு வனத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, "தேடப்படும் புலி ஆட்கொல்லியாக இல்லாமலும் இருக்கலாம், நீலகிரியில் தேடப்பட்டுவரும் புலியைக் கொல்ல வேண்டாம். புலியைப் பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு கூடாது" என்றார்.

போக்கு காட்டிய டி23 புலி
போக்குக் காட்டிய டி23 புலி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை கள இயக்குநர் அருண்குமார் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "டி23 புலியைப் பின்தொடர்வது முதலில் சவாலாக இருந்தது. புலியைப் பின்தொடர்கின்றோம், புதர் அதிகமாக இருப்பதால் அதைப் பிடிப்பதில் சிரமம் உள்ளது.

ஆட்கொல்லி புலி இல்லை

புலி இருக்கும் இடத்தை நான்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். வனப் புதர்களில் அடிக்கடி பதுங்கிக்கொள்கிறது. புலியைப் பிடிக்கும் வியூகத்தை மாற்றியிருக்கின்றோம்.

நான்கைந்து இடங்களில் பரண் அமைத்து கண்காணித்துவருகிறோம். முதல் பரண்களில் இருந்து மயக்க மருந்து செலுத்தி புலி பிடிக்கப்படும், புலியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

50 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 35 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சிங்காரப் பகுதிகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கூடுதலாக இரு மருத்துவர்கள் இந்த ஆபரேஷனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புலி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புலியை ஆட்கொல்லி என வரிசையில் கொண்டுவர முடியாது. இந்த ஆபரேஷனில் மோப்ப நாய்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்த நேரத்திலும் புலி பிடிபட வாய்ப்பு உள்ளது" என்றார்.

டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடிப் பகுதியில் நான்கு பேரை அடித்துக் கொன்ற, வனத் துறையினரால் 20 நாள்களாகத் தேடப்பட்டுவந்த டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றிவந்த டி23 புலிக்கு மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது!

மயக்க ஊசி செலுத்திய பின்னர் புதருக்குள் மறைந்துள்ள புலியைப் பிடிக்க வனத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் 20 நாள்களாகப் போக்குக் காட்டிவந்த டி23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரி புலியை கொல்ல வேண்டாம்- உயர் நீதிமன்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் செப்டம்பர் 24ஆம் தேதி வழக்கம்போல் மாடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்குப் பதுங்கியிருந்த புலி அவரைத் தாக்கியதில் தலை, முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி சந்திரன் உயிரிழந்தார்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மாடுகள், நான்கு மனிதர்களைப் புலி கொன்றுள்ளதால், அதனைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

போக்கு காட்டிய டி23 புலி
போக்குக் காட்டிய டி23 புலி

புலியைப் பிடிக்க கூண்டு

இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத் துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. தேவன் எஸ்டேட் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் 100 வனத் துறையினர் புலியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒன்பது இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ட்ரோன் கேமரா மூலமும், மரங்களின் மீது பரண் அமைத்தும் புலியின் இருப்பிடத்தைக் கண்டறிய வனத் துறையினர் முயற்சித்தனர்.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன், ராஜேஷ்குமார் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டனர். புலி நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத் துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

புலியைப் பிடிக்க முடியவில்லை

போக்கு காட்டிய டி23 புலி
போக்குக் காட்டிய டி23 புலி

ஆனால் புலியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அந்தப் புலியைச் சுட்டுக் கொல்லும்படி, முதன்மைத் தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து உத்தரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்தார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல, புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, உயிருடன் பிடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

புலியைக் கொல்ல வேண்டாம்

இந்த வழக்கு அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீலகிரியில் உலவும் டி23 புலியைக் கொல்லும் திட்டம் ஏதும் இல்லை. புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தமிழ்நாடு வனத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, "தேடப்படும் புலி ஆட்கொல்லியாக இல்லாமலும் இருக்கலாம், நீலகிரியில் தேடப்பட்டுவரும் புலியைக் கொல்ல வேண்டாம். புலியைப் பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு கூடாது" என்றார்.

போக்கு காட்டிய டி23 புலி
போக்குக் காட்டிய டி23 புலி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை கள இயக்குநர் அருண்குமார் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "டி23 புலியைப் பின்தொடர்வது முதலில் சவாலாக இருந்தது. புலியைப் பின்தொடர்கின்றோம், புதர் அதிகமாக இருப்பதால் அதைப் பிடிப்பதில் சிரமம் உள்ளது.

ஆட்கொல்லி புலி இல்லை

புலி இருக்கும் இடத்தை நான்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். வனப் புதர்களில் அடிக்கடி பதுங்கிக்கொள்கிறது. புலியைப் பிடிக்கும் வியூகத்தை மாற்றியிருக்கின்றோம்.

நான்கைந்து இடங்களில் பரண் அமைத்து கண்காணித்துவருகிறோம். முதல் பரண்களில் இருந்து மயக்க மருந்து செலுத்தி புலி பிடிக்கப்படும், புலியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது
டி23 புலி விரைவில் பிடிபடுகிறது

50 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 35 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சிங்காரப் பகுதிகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கூடுதலாக இரு மருத்துவர்கள் இந்த ஆபரேஷனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புலி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புலியை ஆட்கொல்லி என வரிசையில் கொண்டுவர முடியாது. இந்த ஆபரேஷனில் மோப்ப நாய்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்த நேரத்திலும் புலி பிடிபட வாய்ப்பு உள்ளது" என்றார்.

டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடிப் பகுதியில் நான்கு பேரை அடித்துக் கொன்ற, வனத் துறையினரால் 20 நாள்களாகத் தேடப்பட்டுவந்த டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றிவந்த டி23 புலிக்கு மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.

டி23 புலி விரைவில் பிடிபடுகிறது!

மயக்க ஊசி செலுத்திய பின்னர் புதருக்குள் மறைந்துள்ள புலியைப் பிடிக்க வனத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் 20 நாள்களாகப் போக்குக் காட்டிவந்த டி23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரி புலியை கொல்ல வேண்டாம்- உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.