ETV Bharat / state

'மோடி மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்..!' - நாராயணசாமி

நீலகிரி: பிரதமர் மோடி மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அதில் மக்கள் மயங்கி உள்ளதாகவும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Jul 2, 2019, 7:57 PM IST

narayanasamy

புதுச்சேரி மாநிலத்தின் காவல்துறை தலைமை அலுவலர் சுந்தரி நந்தாவின் தாயார் மறைவையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுந்தரி நந்தாவின் இல்லத்திற்கு வந்து, அவரது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த முறை பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, வெளிநாட்டு கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு பதவியேற்ற 90 நாட்களில் 15 லட்சம் வீதம் வங்கியில் செலுத்தபடும். வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் ரத்து என்று அறிவித்த மோடி இதுவரை திட்டங்களை செயல்படுத்தவில்லை" என்றார்.

மோடி மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்: நாராயணசாமி!

மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் 5.8 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது. அதில் மக்கள் மயங்கியுள்ளனர். மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டு வந்து இந்தியை கட்டாயமாக்க முயற்சி எடுத்துவருகிறது. இதற்கு புதுச்சேரி, தமிழ்நாடு, தென்மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், "ஒரே ரேஷன் கார்டு என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ரேஷன் கார்டு குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் இதில் மத்திய அரசு தலையிட கூடாது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் அதிமுக அரசு மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்டளைக்கு கட்டுபட்டு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசு ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மௌனமாக உள்ளது" என்றார்.

புதுச்சேரி மாநிலத்தின் காவல்துறை தலைமை அலுவலர் சுந்தரி நந்தாவின் தாயார் மறைவையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுந்தரி நந்தாவின் இல்லத்திற்கு வந்து, அவரது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த முறை பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, வெளிநாட்டு கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு பதவியேற்ற 90 நாட்களில் 15 லட்சம் வீதம் வங்கியில் செலுத்தபடும். வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் ரத்து என்று அறிவித்த மோடி இதுவரை திட்டங்களை செயல்படுத்தவில்லை" என்றார்.

மோடி மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்: நாராயணசாமி!

மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் 5.8 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது. அதில் மக்கள் மயங்கியுள்ளனர். மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டு வந்து இந்தியை கட்டாயமாக்க முயற்சி எடுத்துவருகிறது. இதற்கு புதுச்சேரி, தமிழ்நாடு, தென்மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், "ஒரே ரேஷன் கார்டு என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ரேஷன் கார்டு குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் இதில் மத்திய அரசு தலையிட கூடாது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் அதிமுக அரசு மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்டளைக்கு கட்டுபட்டு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசு ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மௌனமாக உள்ளது" என்றார்.

Intro:OotyBody:
உதகை 02-07-19
பிரதமர் மோடி மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அதில் மக்கள் மயங்கி உள்ளதாகவும் உதகையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தின் காவல்துறை தலைமை அதிகாரி சுந்தரி நந்தா அவர்களின் தயார் மறைவையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சுந்தரி நந்தா அவர்களின் இல்லத்திற்கு வந்து அவரின் தயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் - கடந்த முறை பிரமராக பொருப்பேற்பதற்கு முன்னதாக வெளிநாட்டு கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு பதவியேற்ற 90நாட்களில் 15லட்சம் வீதம் வங்கியில் செலுத்தபடும் என்றும் வருடத்திற்கு 2கோடி பேருக்கு Nலைவாய்ப்பு, விவசாய கடன் ரத்து என்று அறிவித்த மோடி இதுவரை திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றார். மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழக்கம், ஜி.எஸ்.டி ஆகியவற்றால் 5.8கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.கா வானது மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாகும், அதில் மக்கள் மயங்கியுள்ளதாகவும் குற்றசாட்டினார். மேலும் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா குறித்த கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம்- சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி தர இயலாது எனவும், ராஜினாமா-வை திரும்ப பெருவார்கள் எனவும் சூகுமமான முடிவு எடுக்கபடுமட என்றார். மத்திய அரசு ஒரே நாடு ஒரே மொழியை கொண்டு வந்து இந்தியை கட்டாயமாக்க முயற்சி எடுத்துவருவாதகவும், இதற்கு புதுவை, தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரே ரேஷன் கார்டு என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளதாகவும், ரேஷன் கார்டு குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் இதில் மத்திய அரசு தலையிட கூடாது என்றார். தமிழகதை பொருத்தவரையில் அ.தி.மு.க அரசு மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கட்டளைக்கு கட்டுபட்டு செயல்படுவதாகவும், புதுவை அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு மௌனாமாக உள்ளது என்றார். கலைஞர் கருணாநிதியின் பல்வேறு திட்டங்களை முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தடுத்து முடக்கியதாகவும், சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாகவும், நூலகமாகவும் மாற்றியவர் ஜெயலலிதா என தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வரவேற்கதக்கதாகவும் தெரிவித்தார்.
பேட்டி : நாராயணசாமி – புதுச்சேரி முதல்வர்
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.