ETV Bharat / state

'உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' - கொடநாடு குற்றவாளி கதறல்!

author img

By

Published : Apr 26, 2019, 9:04 PM IST

நீலகிரி: தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஜாமீனில் வெளிவர விரும்பவில்லை என்று கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாளையாறு மனோஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாளையாறு மனோஜ்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ், சதீசன், உதயக்குமார், ஜம்சீர்அலி, ஜித்தீன்ஜாய், மனோஜ்சாமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர். அப்போது, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி சயான் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுவிற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார்.

வாளையாறு மனோஜ்

அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி ஆகியோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்பின் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த வாளையாறு மனோஜ் செய்தியாளர்களிடம் பேச முயன்றார். ஆனால், அவரை செய்தியாளர்களிடம் பேச விடாமல் போலிசார் அவரை வேகமாக அழைத்துச் சென்றனர். இருப்பினும் வாளையாறு மனோஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கேரளாவிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதால் ஜாமீனில் வெளியில் வர விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ், சதீசன், உதயக்குமார், ஜம்சீர்அலி, ஜித்தீன்ஜாய், மனோஜ்சாமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர். அப்போது, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி சயான் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுவிற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார்.

வாளையாறு மனோஜ்

அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி ஆகியோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்பின் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த வாளையாறு மனோஜ் செய்தியாளர்களிடம் பேச முயன்றார். ஆனால், அவரை செய்தியாளர்களிடம் பேச விடாமல் போலிசார் அவரை வேகமாக அழைத்துச் சென்றனர். இருப்பினும் வாளையாறு மனோஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கேரளாவிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதால் ஜாமீனில் வெளியில் வர விரும்பவில்லை என்றும் கூறினார்.

உதகை                                   26-04-19
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உதகை நீதிமனத்தில் ஆஜரான வாளையாறு மனோஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஜாமீனில் வெளியில் வர விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
       நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய வழக்கு விசாரணைக்கு சயான், வாளையாறுமனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ், சதீசன், உதயக்குமார், ஜம்சீர்அலி, ஜித்தீன்ஜாய், மனோஜ்சாமி ஆகிய 10 பேர் ஆஜராகினர். அப்போது கடந்த வழக்கு விசாரணையின் போது வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி சயான் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுவிற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார்.
    அதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜன்குட்டி ஆகியோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜீன் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன் பின் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த வாளையாறு மனோஜ் செய்தியாளர்களிடம் பேச முயன்றார். ஆனால் அவரை செய்தியாளர்களிடம் பேச விடாமல் போலிசார் அழைத்து சென்றனர். இருப்பினும் வாளையாறு மனோஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கேரளாவிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதால் ஜாமீனில் வெளியில் வர விரும்பவில்லை என்று கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாயான் மற்றும் வாளையாறு மனோஜ் தரப்பு வழக்கறிஞர் கோவை சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யபடும் என்றும் இந்த வழக்கு விசாரணையை தேவைபட்டால் வேறு மாநிலத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்யபடும் எனவும் தெரிவித்தார்.
பேட்டி: 1. வாளையாறு மனோஜ் 
      2. ஆனந்தன் - சயான் தரப்பு வழக்கறிஞர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.