ETV Bharat / state

குன்னூரில் பலாப்பழம் விற்கத் தடை

author img

By

Published : Jun 14, 2019, 8:13 AM IST

நீலகிரி: மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால் பலாப்பழங்கள் விற்க வனத் துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் பலாப்பழம் விற்க தடை?

நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் பலாப்பழம் சீசன் ஆரம்பிப்பதால் காட்டு யானைகள் பலாப்பழங்களை உண்பதற்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.

பயிரிடப்பட்டுள்ள பலா, வாழை, மா மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதற்காக அப்பகுதியிலேயே பல நாட்கள் யானைகள் முகாமிட்டு விடுவதாகவும், இதற்காக சாலைப் பகுதிகளை கடக்கும் யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குன்னூரில் பலாப்பழம் விற்கத் தடை

இதனால் யானைகள் வருவதை தடுப்பதற்கு வனத் துறையினர் பர்லியார் பகுதியில் உள்ள அனைத்து பலா மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் பலாப்பழம் சீசன் ஆரம்பிப்பதால் காட்டு யானைகள் பலாப்பழங்களை உண்பதற்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.

பயிரிடப்பட்டுள்ள பலா, வாழை, மா மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதற்காக அப்பகுதியிலேயே பல நாட்கள் யானைகள் முகாமிட்டு விடுவதாகவும், இதற்காக சாலைப் பகுதிகளை கடக்கும் யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குன்னூரில் பலாப்பழம் விற்கத் தடை

இதனால் யானைகள் வருவதை தடுப்பதற்கு வனத் துறையினர் பர்லியார் பகுதியில் உள்ள அனைத்து பலா மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Intro:குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் பலாப்பழம் வைக்க தடை


Body:நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதி வனத்தை ஒட்டியுள்ள பகுதி ஆகும் தற்போது இங்கு பலாப்பழ சீசன் ஆரம்பிப்பதால் காட்டு யானைகள் பலாப்பழத்தை உண்பதற்காக குடியிருப்புப் பகுதிக்கு வருகிறது இங்கு பயிரிடப்பட்டுள்ள பலா மரங்கள் வாழை மரங்கள் மா மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி பழங்களை உண்ணுகின்றன மேலும் காட்டு யானைகள் அப்பகுதியிலேயே பல நாட்கள் முகாமிட்டு விடுகின்றன கடந்த இரண்டு நாட்களாக மரப்பாலம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில் வழியாக செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர் மேலும் வனத்துறையினர் பர்லியார் பகுதியில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையோரங்களிலும் கடைகளிலும் பலாப்பழம் விற்க தடை விதித்துள்ளனர் இங்கு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பேட்டி பிரகாஷ் குன்னூர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.