ETV Bharat / state

பொங்கல் கொண்டாட சென்ற ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்

நீலகிரி: பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்ற ஓட்டுநர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

author img

By

Published : Jan 17, 2020, 10:27 PM IST

padmanathan
padmanathan

நீலகிரி மாவட்டம் உதகை எழநெல்லி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(40). இவர் அரசு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு எழநெல்லி அருகேயுள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சொந்த தோட்டம் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையை தோட்டத்தில் களிக்க இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் உள்ள குளத்தில் பத்மநாதன், உறவினர்கள் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக பத்மநாதன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

இதனையடுத்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசல்: மயக்கமடைந்த பார்வையாளர் மரணம்

நீலகிரி மாவட்டம் உதகை எழநெல்லி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(40). இவர் அரசு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு எழநெல்லி அருகேயுள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சொந்த தோட்டம் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையை தோட்டத்தில் களிக்க இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் உள்ள குளத்தில் பத்மநாதன், உறவினர்கள் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக பத்மநாதன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

இதனையடுத்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசல்: மயக்கமடைந்த பார்வையாளர் மரணம்

Intro:Body:அன்னவாசல் அருகே ஊட்டியில் இருந்து பொங்கல் கொண்டாட குடும்பத்துடன் தோட்டத்திற்கு வந்தவர் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.

ஊட்டியில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் தோட்டத்திற்கு வந்த அரசு டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊட்டி எழநெல்லி பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது-40) அரசு டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி சாலையில் வயல் தோட்டம் ஒன்று உள்ளது.
இந்த நிலையில் இவரது உறவினர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை தங்களது தோட்டத்தில் களிக்கலாம் என நினைத்து கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு தோட்டத்திற்கு வந்ததாக வந்தனர்.
இந்த நிலையில் காலை தோட்டத்தில் உள்ள குளத்தில் பத்மநாதன் உள்ளிட்ட சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்பொழுது எதிர்பாராத விதமாக பத்மநாதன் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.இதனையடுத்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை உடனடியாக மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவாமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் கொண்டாடுவதற்காக ஊட்டியில் இருந்து அவர்களது தோட்டத்திற்கு வந்த நிலையில் தோட்டத்தில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.