நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மே.5ஆம் தேதி 139 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட அதிக அளவில் முன்வருகின்றனர்.
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உள்பட எந்த இடங்களிலும் கரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் மக்கள் மருத்துவமனைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்!