ETV Bharat / state

மரநாயை கரடிக்குட்டி என நினைத்து அச்சமடைந்த கிராம மக்கள்!

நீலகிரி: குன்னூர் குடியிருப்புப் பகுதிக்குள் தாயை தேடி வந்த மரநாயை பிடித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

author img

By

Published : Apr 20, 2019, 5:09 PM IST

மரநாய்

நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சமீப காலமாக அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில், குன்னூர் நகரின் காந்திபுரம், இந்திராநகர் குடியிருப்புப் பகுதிக்குள் தாயை பிரிந்த மரநாய்க்குட்டி ஒன்று தாயைத் தேடி வந்துள்ளது. ஊருக்குள் வந்த மரநாயை கரடிக்குட்டி என நினைத்து ஊர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பின்னர் ஊருக்குள் வந்தது கரடிக்குட்டி அல்ல, மரநாய்தான் என தெரிந்ததையடுத்து, அதனைப் பிடித்த ஊர் மக்கள், வனக்காவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த மரநாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் வந்த மரநாய்

நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சமீப காலமாக அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில், குன்னூர் நகரின் காந்திபுரம், இந்திராநகர் குடியிருப்புப் பகுதிக்குள் தாயை பிரிந்த மரநாய்க்குட்டி ஒன்று தாயைத் தேடி வந்துள்ளது. ஊருக்குள் வந்த மரநாயை கரடிக்குட்டி என நினைத்து ஊர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பின்னர் ஊருக்குள் வந்தது கரடிக்குட்டி அல்ல, மரநாய்தான் என தெரிந்ததையடுத்து, அதனைப் பிடித்த ஊர் மக்கள், வனக்காவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த மரநாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் வந்த மரநாய்
Intro:



நீலகிரி மாவட்டத்தில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சமீப காலமாக குடியிருப்பு பகுதி அருகே வந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று குன்னூர் நகரில் காந்திபுரம் இந்திராநகர் குடியிருப்பு பகுதிக்கு மர நாய் குட்டி ஒன்று தாயை பிரிந்து தவித்து வந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் அதனை கரடி குட்டி என நினைத்து அச்சமடைந்தார்கள். மேலும், இளைஞர்கள் அங்குள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட முயன்றனர். ஆனால் மழையை தொடர்ந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததால் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து,  குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த வனக்காவலர் அசோக்குமாரிடம் இளைஞர்கள் அதனை ஒப்படைத்தனர். அப்போது மரநாய் என தெரிந்ததும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தொடர்ந்து அந்த மரநாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்து கொண்டு சென்றனர்.








Body:



நீலகிரி மாவட்டத்தில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சமீப காலமாக குடியிருப்பு பகுதி அருகே வந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று குன்னூர் நகரில் காந்திபுரம் இந்திராநகர் குடியிருப்பு பகுதிக்கு மர நாய் குட்டி ஒன்று தாயை பிரிந்து தவித்து வந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் அதனை கரடி குட்டி என நினைத்து அச்சமடைந்தார்கள். மேலும், இளைஞர்கள் அங்குள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட முயன்றனர். ஆனால் மழையை தொடர்ந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததால் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து,  குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த வனக்காவலர் அசோக்குமாரிடம் இளைஞர்கள் அதனை ஒப்படைத்தனர். அப்போது மரநாய் என தெரிந்ததும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தொடர்ந்து அந்த மரநாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்து கொண்டு சென்றனர்.







Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.