நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. இவற்றில் அழிவின் பிடியில் உள்ள கருப்பு மர நாய்கள் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி அருகே ஜிம்கானா பகுதியில் கருப்பு மர நாய் ஒன்று கம்பி வேலியில் சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் கம்பியில் சிக்கிய மர நாயை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.