ETV Bharat / state

உதகையில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

author img

By

Published : Mar 13, 2020, 1:59 PM IST

நீலகிரி: கூடலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இந்தப் பணியில் கல்லூரி மாணவர்கள் உள்பட 60 பேர் ஈடுபட்டுள்ளனர்.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் 40 விழுக்காடு வனப்பகுதிகளாக உள்ளன. இங்கு யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேலான வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்தாண்டு அந்தப் பணி இன்று அதிகாலை தொடங்கியது. அந்தப் பணியில் கல்லூரி மாணவர்கள், வன ஊழியர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் 15 குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர்.

முதல் நாளான இன்று வனவிலங்குகளை நேரடியாக கண்டறிவது, தடங்காட்டி கருவி மூலம் பதிவுசெய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. நாளை வனவிலங்குகளின் எச்சம், கால்தடம் போன்றவற்றை சேகரித்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை, வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்டறிய முடியும் என வனத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சேலத்தில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணி

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் 40 விழுக்காடு வனப்பகுதிகளாக உள்ளன. இங்கு யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேலான வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்தாண்டு அந்தப் பணி இன்று அதிகாலை தொடங்கியது. அந்தப் பணியில் கல்லூரி மாணவர்கள், வன ஊழியர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் 15 குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர்.

முதல் நாளான இன்று வனவிலங்குகளை நேரடியாக கண்டறிவது, தடங்காட்டி கருவி மூலம் பதிவுசெய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. நாளை வனவிலங்குகளின் எச்சம், கால்தடம் போன்றவற்றை சேகரித்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை, வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்டறிய முடியும் என வனத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சேலத்தில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.