ETV Bharat / state

உதகையில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு! - electric shock died at nilgiri farmer land

நீலகிரி: உதகை அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 people died due to electric shock at Nilgiri
மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு
author img

By

Published : Dec 14, 2019, 10:15 PM IST

நீலகிரி மாவட்டம் கடசோலை அருகே உள்ள மலைக்கோட்டை பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு பணிபுரியவந்த பாலன் என்ற தொழிலாளி கீழே வயர் அறுந்துக்கிடப்பது தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதைப் பார்த்த அருகிலிருந்த குமார், மணி என்ற பெண் தொழிலாளி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதகையில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு: அரங்கேறிய கூட்டு பாலியல் வன்முறை!

நீலகிரி மாவட்டம் கடசோலை அருகே உள்ள மலைக்கோட்டை பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு பணிபுரியவந்த பாலன் என்ற தொழிலாளி கீழே வயர் அறுந்துக்கிடப்பது தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதைப் பார்த்த அருகிலிருந்த குமார், மணி என்ற பெண் தொழிலாளி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உதகையில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு: அரங்கேறிய கூட்டு பாலியல் வன்முறை!

Intro:OotyBody:உதகை அருகே மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கடசோலை அருகே உள்ள மலைக்கோட்டை பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள ஆழ்த்துளை கிணறுக்கு செல்லும் ஒயர் அறுத்து கீழே விழந்து கிடந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ஒயர் அறுந்து கிடப்பது தெரியாமல் அங்கு பணி புரிந்து வந்த பாலன் என்ற தொழிலாளி ஒயரை மித்துள்ளார். அப்போது பாலனை மின்சாரம் தாக்கி உள்ளது. உடலில் மின்சாரம் பாய்ந்ததால் உயிருக்கு போராடிய பாலனை அருகில் இருந்த குமார் என்ற தொழிலாளியும் மணி என்ற பெண் தொழிலாளியும் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுமந்து காவல்துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகாக உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி - திரு. தம்மண்ணண் - கடசோலை கிராமம்Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.