ETV Bharat / state

’இந்தி மொழி வேண்டும்’ என நகரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

author img

By

Published : Jun 5, 2019, 2:13 PM IST

தஞ்சாவூர்: ’இந்தி மொழி வேண்டும்’ என நகரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

போஸ்டரால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மும்மொழி கல்வித் திட்டத்தின் வரைவறிக்கையின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது பாடமாக இந்தி படிப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பல தரப்பு மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டால் மீண்டும் 1965ஆம் ஆண்டு மொழிப்போர் வெடித்ததைப் போல மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசு திட்ட வரைவு அறிக்கையில் திருத்தம் செய்து மும்மொழி கல்வித் திட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில், தஞ்சாவூரின் முக்கிய கடை வீதியான அரண்மனை ரோடு, அதனைச் சுற்றியுள்ள நகரப்பகுதிகளில் இந்து மக்கள் கட்சியினர் எங்களுக்கு இந்தி வேண்டும் என்ற தலைப்புடன் நாடெங்கும் நவோதயா பள்ளியை திறந்திடு என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்துவரும் வேளையில் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மும்மொழி கல்வித் திட்டத்தின் வரைவறிக்கையின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது பாடமாக இந்தி படிப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பல தரப்பு மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டால் மீண்டும் 1965ஆம் ஆண்டு மொழிப்போர் வெடித்ததைப் போல மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசு திட்ட வரைவு அறிக்கையில் திருத்தம் செய்து மும்மொழி கல்வித் திட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில், தஞ்சாவூரின் முக்கிய கடை வீதியான அரண்மனை ரோடு, அதனைச் சுற்றியுள்ள நகரப்பகுதிகளில் இந்து மக்கள் கட்சியினர் எங்களுக்கு இந்தி வேண்டும் என்ற தலைப்புடன் நாடெங்கும் நவோதயா பள்ளியை திறந்திடு என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்துவரும் வேளையில் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் ஜுன் 05


தஞ்சாவூரில் இந்தி  மொழிக்கு ஆதரவாக எங்களுக்கு இந்தி வேண்டும் என்ற தலைப்புடன் நகரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு



மத்திய அரசு அண்மையில் அறிவித்த மும்மொழி கல்வித் திட்டத்தின் வரைவறிக்கையின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது பாடமாக இந்தி படிப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் 1965ஆம் ஆண்டு மொழிப்போர் போல மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பல்வேறு கட்சியினர் அமைப்பினர்ர்  எச்சரிக்கை விடுத்திருந்தனர் இந்நிலையில் அண்மையில் திட்ட வரைவு அறிக்கையில் திருத்தம் செய்து இருந்த நிலையில் தஞ்சாவூரில் முக்கிய கடைவீதி களான 
அரண்மனை ரோடு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் எங்களுக்கு ஹிந்தி வேண்டும் என தலைப்புடன் , தமிழக அரசு அரசு மற்றும் தனியார் பள்ளியில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த நாடெங்கும் நவோதயா பள்ளியை திறந்திடு என்ற வாசகங்களுடன் இந்து மக்கள் கட்சியினரின் தலைவர் சம்பத் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இந்த போஸ்டரால் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.