ETV Bharat / state

தஞ்சை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

தஞ்சை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தஞ்சை மாவட்ட கடற்கரை மீனவர்கள்  கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

author img

By

Published : Aug 6, 2019, 8:21 AM IST

தஞ்சை

தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான பகுதிகளில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் பயன்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தஞ்சை கடல் பகுதியில் 40 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் வரை சூறைக் காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

எனவே தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதிலுள்ள மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான பகுதிகளில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் பயன்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தஞ்சை கடல் பகுதியில் 40 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் வரை சூறைக் காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

எனவே தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதிலுள்ள மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Intro:வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் அதிவேகத்துடன் காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத் துறை எச்சரிக்கை


Body:தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான பகுதிகளில் 1300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 220க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கடலில் சூறைக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர். இருந்தும் இன்று வானிலை ஆராய்ச்சி மையம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடலில் 40 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என அறிவித்திருந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன் வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விசைப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்ல மாட்டார்கள் இதனால் தொடர்ந்து ஐந்து நாட்களாக மீன்பிடித் தொழில் முடங்கி உள்ளன.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.