ETV Bharat / state

'மதுக்கடையை அடித்து நொறுக்குவோம்' - பெண்கள் எச்சரிக்கை

author img

By

Published : Feb 18, 2020, 2:57 PM IST

தஞ்சாவூர்: புதிதாக திறக்கப்படவுள்ள மதுக்கடையைத் திறக்கக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அக்கடை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Thanjavur women protest
முற்றுகைப் போராட்டத்தில் பெண்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்படவுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் காவல் துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

முற்றுகைப் போராட்டத்தில் பெண்கள்

தொடர்ந்து வருவாய்த் துறையினர் மூலம் மதுக்கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மதுக்கடையை திறந்தால் மறியலில் ஈடுபடுவோம் என்றும் கடையை அடித்து நொறுக்குவோம் என்றும் அப்பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : குத்தாலம் அருகே இறுதி ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் குத்திக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்படவுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் காவல் துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

முற்றுகைப் போராட்டத்தில் பெண்கள்

தொடர்ந்து வருவாய்த் துறையினர் மூலம் மதுக்கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மதுக்கடையை திறந்தால் மறியலில் ஈடுபடுவோம் என்றும் கடையை அடித்து நொறுக்குவோம் என்றும் அப்பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : குத்தாலம் அருகே இறுதி ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் குத்திக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.