ETV Bharat / state

சிலைகளாக செதுக்கப்படும் 'மனக்கண்' கொண்ட மாணவர்கள்! - Thanjavur vision impaired students

தஞ்சாவூர்: அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்படும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களை, ஆசிரியர்கள் சிலைகளாக செதுக்கி சமுதாயத்திற்கு ஏற்ற குடிமக்களாக மாற்றுகின்றனர். இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பினை தற்போது காணலாம்.

Thanjavur vision impaired students Wacky, தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோர் மாணவர்கள் அசத்தல்
author img

By

Published : Oct 23, 2019, 6:42 PM IST

தஞ்சாவூரில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்காக அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 1975ஆம் ஆண்டு திருவாரூரில் தொடக்கப்பள்ளியாக தொடங்கி தஞ்சாவூரில் 1986ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும் 2005ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் 2014ஆம் ஆண்டு முதல், மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.

இப்பள்ளியில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.

இங்கு படிக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் ஐந்தாண்டாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி கராத்தே, யோகா என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Thanjavur vision impaired students Wacky, தஞ்சாவூர் பார்வைத்திறன் குறைபாடுடையோர் மாணவர்கள் அசத்தல்

அதேபோல், தன் உணர்வுகள் மூலம் சாலைகளைக் கடப்பது, கைத்தடிகளைப் பயன்படுத்துவது, யோகா, பாட்டு, நாட்டியம், நாடகம், கைவினைப் பயிற்சி என அவர்கள் செய்ய முடியாத பல பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவருகின்றன.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, தாங்கள் பள்ளிக்கு வருவதால் தன்னைப் போலவே பல நண்பர்கள் கிடைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய நிறை-குறைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது என்றனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பும்போது, இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளை அனுப்பத் தயங்குகின்றனர். இதனால் அவர்கள் சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட பார்வையற்றோர் உள்ள நிலையில், 50 விழுக்காட்டினரைக் கூட பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன்வரவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் துண்டுப்பிரசுரம், மாற்றுத்திறனாளிகள் உள்ள வீட்டில் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, குறைபாடுள்ள மாணவர்கள் தானாக முன்வந்து பள்ளிகளில் படித்து தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக பெற்றோரும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பார்வை இன்றியும் திரைப்படங்களுக்கு இசையமைக்க முடியும்!

தஞ்சாவூரில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்காக அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 1975ஆம் ஆண்டு திருவாரூரில் தொடக்கப்பள்ளியாக தொடங்கி தஞ்சாவூரில் 1986ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும் 2005ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் 2014ஆம் ஆண்டு முதல், மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.

இப்பள்ளியில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.

இங்கு படிக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் ஐந்தாண்டாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி கராத்தே, யோகா என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Thanjavur vision impaired students Wacky, தஞ்சாவூர் பார்வைத்திறன் குறைபாடுடையோர் மாணவர்கள் அசத்தல்

அதேபோல், தன் உணர்வுகள் மூலம் சாலைகளைக் கடப்பது, கைத்தடிகளைப் பயன்படுத்துவது, யோகா, பாட்டு, நாட்டியம், நாடகம், கைவினைப் பயிற்சி என அவர்கள் செய்ய முடியாத பல பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவருகின்றன.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, தாங்கள் பள்ளிக்கு வருவதால் தன்னைப் போலவே பல நண்பர்கள் கிடைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய நிறை-குறைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது என்றனர்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பும்போது, இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளை அனுப்பத் தயங்குகின்றனர். இதனால் அவர்கள் சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட பார்வையற்றோர் உள்ள நிலையில், 50 விழுக்காட்டினரைக் கூட பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன்வரவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் துண்டுப்பிரசுரம், மாற்றுத்திறனாளிகள் உள்ள வீட்டில் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, குறைபாடுள்ள மாணவர்கள் தானாக முன்வந்து பள்ளிகளில் படித்து தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக பெற்றோரும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பார்வை இன்றியும் திரைப்படங்களுக்கு இசையமைக்க முடியும்!

Intro:தஞ்சாவூர் அக் 21

பார்வையற்ற மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அரசுப் பள்ளி பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே வைத்துக் கொள்ளாமல் அவர்களை பள்ளிக்கு அனுப்பி எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.Body:

தஞ்சாவூரில் பார்வைத்திறன் குறைவு இவருக்கு மாணவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது 1975 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி தஞ்சாவூரில் 1986 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும் 2005 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் 2014 ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் பார்வையற்றோர் மற்றும் பகுதி பார்வையற்றோர்கான தஞ்சை நாகை திருவாரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி படிக்கும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் எழுதக்கூடிய மாணவர்கள் 5 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதும் அவர்களுக்கு தேவையான கல்வியை மட்டும் அழிக்காமல் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகின்றனர் கராத்தே யோகா என பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகின்றனர் பார்வையற்ற மாணவர்கள் சாலையை கடக்கும் பொழுது எப்படி கடக்க வேண்டும் கைத்தடியை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் தன் உணர்வுகள் மூலம் அதனை அறிந்து கொள்வது எப்படி பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் எப்பொழுதுமே தனித்து வீட்டிலேயே இருந்தால் அவர்களுக்கு சக மனிதர்களுடன் பழக முடியாது இது போன்ற பள்ளிக்கு வந்தார் பார்வை குறைபாடு உள்ள மற்ற மாணவருடன் இணைந்து கல்வி கற்க வேண்டும் அவ்வாறு எவ்வாறு பேச வேண்டும் விளையாட வேண்டும் என கூறும் ஆசிரியர்கள் இவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது தமிழக அரசின் சார்பில் யோகா பாட்டு நாட்டியம் நாடகம் கைவினை பயிற்சி என அவர்கள் செய்ய முடியாத பல பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர் சதுரங்கம் விளையாடுவது தொடுகை மூலம் கற்றல் கற்பித்தல் எழுதுதல் தனி விளையாட்டு குழு விளையாட்டு என அனைத்துவித பயிற்சியும் அளித்து வருகின்றனர் சாதாரணமாக மாணவர்கள் மூன்று வயது முதலே பள்ளிப்படிப்பை தொடங்குவதற்கு பெற்றோருடன் அனுப்பி விடுகின்றனர் ஆனால் இதுபோன்ற குறைபாடு உள்ள பிள்ளைகளை எளிதில் பள்ளிக்கு அனுப்புவதில்லை இதனால் அவர்கள் சமூகத்தை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற அரசுப்பள்ளிகள் குறைபாடு உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதற்காக பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள் மேலும் மாணவர்கள் கூறும் போது தாங்கள் இது போல் பள்ளிக்கு வருவதால் பார்வையற்ற தங்களுக்கு தன்னைப் போலவே பல நண்பர் கிடைப்பதாகவும் அவர்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய நிறை குறைகளை அவரிடம் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது அவருடைய துணையையும் தங்களுக்கு கிடைக்கிறது நட்பும் கிடைக்கிறது என்கின்றனர் மாணவர்கள், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பார்வையற்றோர் நூற்றுக்கு மேற்பட்டோர் உள்ள நிலையில் இதில் 50 சதவீதம் கூட பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வில்லை செல்லப்பட்டவர்கள் காலம் தாழ்த்தி 10 வயது பதினைந்து வயது என குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது சேர்த்து வந்தால் அவர்களால் கல்வி கற்க முடியாது இளம் வயதிலேயே சாதாரண குழந்தைகளைப் போல் அவர்களையும் பள்ளிக்கு அனுப்பினால் சிறந்த கல்வியை வழங்க முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள் இது மட்டுமில்லாமல் துண்டு பிரசுரம் மூலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள வீட்டில் உள்ள நேரடியாகச் சென்று அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் முன் வந்து மட்டுமே அவர்கள் நிலையான கல்வியை அளிக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள்


பேட்டி : 1,பரமேஸ்வரன் பார்வையற்ற மாணவன்

2, ஷாலினி பார்வையற்ற மாணவி

3, சோபியா விளையாட்டு ஆசிரியை

Conclusion:Ar.Sudhakaran
Tanjore 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.