ETV Bharat / state

ஆற்றில் மூழ்கிய நபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்!

author img

By

Published : Aug 23, 2020, 2:14 AM IST

தஞ்சாவூர்: குடமுருட்டி ஆற்றில் மூழ்கிய அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

dead
dead

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி குடமுருட்டி ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எதிர்க்கரையில் இருந்து நடந்து வரும்போது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கினார்.

இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக தேடுவதற்கு அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை தேடி வருகின்றனர்.

இதுவரை கண்டுபிடிக்க முடியாததால், அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து தேடும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 6 வருடத்திற்கு பின் 60 அடியை எட்டிய கோதாவரி - மாவட்ட நிர்வாகம் 3ஆம் கட்ட எச்சரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி குடமுருட்டி ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எதிர்க்கரையில் இருந்து நடந்து வரும்போது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கினார்.

இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக தேடுவதற்கு அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை தேடி வருகின்றனர்.

இதுவரை கண்டுபிடிக்க முடியாததால், அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் தொடர்ந்து தேடும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 6 வருடத்திற்கு பின் 60 அடியை எட்டிய கோதாவரி - மாவட்ட நிர்வாகம் 3ஆம் கட்ட எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.