ETV Bharat / state

தஞ்சையில் ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பதுக்கல்!

author img

By

Published : Oct 1, 2019, 11:42 PM IST

தஞ்சாவூர்: 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை, தஞ்சை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

four people arrested

தஞ்சையில், கள்ளநோட்டுடன், ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையிலான தனிப்படையினர், தஞ்சை மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

fake money
Thanjavur police station

சந்தேகத்திற்கிடமான முறையில், மன்னார்குடி சாலையில், நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் தஞ்சை மருத்துவக் கல்லுாரி சாலை கண்ணன் நகரைச் சேர்ந்த கதிரவன் என்பதும், அவர் கள்ள நோட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மன்னார்குடியைச் சேர்ந்த செந்தமிழன், கேரளாவை சேர்ந்த சாஜிகுமார், மன்னார்குடி மேலதெருவைச் சேர்ந்த அசோக் ஆகியோரைப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த 68 எண்ணிக்கையிலான, 500 ரூபாய் கள்ளநாட்டுக்களை கைப்பற்றினர்.

மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ள நோட்டு மாற்றுவதற்கு பின்னணியில் தெம்பன்குடிசை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் செயல்படுவதாக தெரியவந்தது. சரவணனை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: காவல்துறையும் ரவுடியும் சாலைநடுவில் கட்டி உருண்ட வீடியோ!

தஞ்சையில், கள்ளநோட்டுடன், ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையிலான தனிப்படையினர், தஞ்சை மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

fake money
Thanjavur police station

சந்தேகத்திற்கிடமான முறையில், மன்னார்குடி சாலையில், நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் தஞ்சை மருத்துவக் கல்லுாரி சாலை கண்ணன் நகரைச் சேர்ந்த கதிரவன் என்பதும், அவர் கள்ள நோட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மன்னார்குடியைச் சேர்ந்த செந்தமிழன், கேரளாவை சேர்ந்த சாஜிகுமார், மன்னார்குடி மேலதெருவைச் சேர்ந்த அசோக் ஆகியோரைப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த 68 எண்ணிக்கையிலான, 500 ரூபாய் கள்ளநாட்டுக்களை கைப்பற்றினர்.

மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ள நோட்டு மாற்றுவதற்கு பின்னணியில் தெம்பன்குடிசை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் செயல்படுவதாக தெரியவந்தது. சரவணனை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: காவல்துறையும் ரவுடியும் சாலைநடுவில் கட்டி உருண்ட வீடியோ!

Intro:
தஞ்சாவூர்,அக். 01


தஞ்சையில், 34 ஆயிரம், மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை, தஞ்சை தாலூக போலீசார் கைது செய்தனர், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 68 எண்ணிக்கையில் கைப்பற்றினர். Body:.


தஞ்சையில், கள்ளநோட்டுடன், ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையிலான தனிப்படையினர், தஞ்சை மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில், மன்னார்குடி சாலையில், நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தஞ்சை மருத்துவக் கல்லுாரி சாலை கண்ணன் நகரை சேர்ந்த திருப்பதி மகன் கதிரவன்,50, என்பதும், அவர் கள்ள நோட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மன்னார்குடி கோரப்பாளையம் ரோடு சோமு மகன் செந்தமிழன்,52, மன்னார்குடி பாரதிதாசன் நகரில் வசிக்கும் ,கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த, சாஜிகுமார்,55, மன்னார்குடி மேலதெருவைச் சேர்ந்த முருகையன் மகன் அசோக்,61, ஆகியோரை பிடித்து கைது செய்தனர். அவர்கள் புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 68 எண்ணிக்கையில் கைப்பற்றினர்.
மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ள நோட்டு மாற்றுவதற்கு பின்னணியில், தெம்பன்குடிசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் செயல்படுவதாக தெரியவந்தது. இதையடுத்து சரவணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, வீடு பூட்டிருந்த நிலையில், போலீசார் மற்றொரு பூட்டை கொண்டு,சரவணன் வீட்டை பூட்டி வைத்து வந்தனர்.
அவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை, மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர்கள் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.