தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு (2020) கரோனா பெருந்தொற்று பொதுமுடக்கம் காரணமாக சித்திரைப் பெருந்திருவிழாவும், தோரோட்டமும் நடைபெறவில்லை.
![தஞ்சை பெரிய கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11336600_thanjavur.jpg)
இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா இன்று (ஏப். 9) காலை தொடங்கியது. அப்போது, மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
![பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11336600_tanjore.jpg)
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2015ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவந்த தேரோட்டம் கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டும், நிகழாண்டும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11336600_uhrrf.jpg)
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதால் நாளைமுதல் கோயில் திருவிழாக்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இருப்பினும், நிபந்தனைகளுக்குள்பட்டு புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.