ETV Bharat / state

மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து: மகனைக் காப்பாற்றி தந்தை பலி!

author img

By

Published : May 20, 2021, 7:36 AM IST

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே மின்கம்பி அறுந்து விழுந்தது நடந்த விபத்தில் இரண்டு வயது மகனைக் காப்பாற்றி தந்தை உயிரிழந்தார்.

death
death

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (34). இவர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், இன்று (மே 19) காலை இவரது வீட்டின் முன்பு உயர்அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. இதனை கதிர்வேலின் மகன் அன்புச்செல்வன்(2) தொடச் சென்றார். இதைப்பார்த்த பதறிபோன கதிர்வேல், மகனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிச்சென்று அன்பு செல்வனை அங்கிருந்து தூக்கியெறிந்துள்ளார்.

அப்போது, கதிர்வேல் மீது மின்சாரம் தாக்கி அவர் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கதிர்வேலை சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கதிர்வேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தூக்கியெறியப்பட்டதில் காயம் அடைந்த அன்புச் செல்வன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கதிர்வேலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (34). இவர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், இன்று (மே 19) காலை இவரது வீட்டின் முன்பு உயர்அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. இதனை கதிர்வேலின் மகன் அன்புச்செல்வன்(2) தொடச் சென்றார். இதைப்பார்த்த பதறிபோன கதிர்வேல், மகனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிச்சென்று அன்பு செல்வனை அங்கிருந்து தூக்கியெறிந்துள்ளார்.

அப்போது, கதிர்வேல் மீது மின்சாரம் தாக்கி அவர் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கதிர்வேலை சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கதிர்வேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தூக்கியெறியப்பட்டதில் காயம் அடைந்த அன்புச் செல்வன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கதிர்வேலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.