ETV Bharat / state

நரிக்குறவ சமுதாய மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 7:09 PM IST

World Tourism Day: தஞ்சாவூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அருங்காட்சியகம், 7 D தியேட்டர், பறவைகள் பூங்கா, பெரிய கோயில் போன்ற சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

narikuravar community students taken to tour on the world tourism day in thanjavur
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் ஒரு குட்டி ட்ரிப்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் ஒரு குட்டி ட்ரிப்

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், கடந்த செப் 25-ஆம் தேதி முதல் அக் 1-ஆம் தேதி வரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, மாலை அணிவித்து வரவேற்று தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடைப்பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்படப் போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை கால அரசு விடுமுறை விடப்பட்டிருந்ததால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முயற்சியால் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த, பள்ளிக்குச் செல்லும் 35 மாணவர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்ல தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் தஞ்சையின் சுற்றுலா இடங்களான பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், வெளிநாட்டு பறவைகளின் சரணாலயம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என பல்வேறு சுற்றுலா தளங்களைக் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு டி-ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் சார்பில் தஞ்சை தாரகை கைவினைப் பொருட்களின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு ஜோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், இச்சுற்றுலாவை வழி நடத்திச் சென்றார். இச்சுற்றுலாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் சுற்றுலா இடங்களைக் கண்டு ரசித்து, மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய பள்ளி மாணவி ஜெயப்பிரியா, “விடுமுறை நாளில் நாங்கள் ஊரில் சுற்றிக் கொண்டு இருப்போம். ஆனால் இப்போது மியூசியம், பெரிய கோயில், 7-D தியேட்டர், பறவைகள் பூங்கா ஆகிய இடங்களைப் பார்வையிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு எஸ்.பி ஆபிஸில் தஞ்சம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் ஒரு குட்டி ட்ரிப்

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், கடந்த செப் 25-ஆம் தேதி முதல் அக் 1-ஆம் தேதி வரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, மாலை அணிவித்து வரவேற்று தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடைப்பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்படப் போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை கால அரசு விடுமுறை விடப்பட்டிருந்ததால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முயற்சியால் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த, பள்ளிக்குச் செல்லும் 35 மாணவர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்ல தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள் தஞ்சையின் சுற்றுலா இடங்களான பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், வெளிநாட்டு பறவைகளின் சரணாலயம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என பல்வேறு சுற்றுலா தளங்களைக் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு டி-ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் சார்பில் தஞ்சை தாரகை கைவினைப் பொருட்களின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு ஜோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை நினைவுப் பரிசாக வழங்கினார்.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், இச்சுற்றுலாவை வழி நடத்திச் சென்றார். இச்சுற்றுலாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் சுற்றுலா இடங்களைக் கண்டு ரசித்து, மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய பள்ளி மாணவி ஜெயப்பிரியா, “விடுமுறை நாளில் நாங்கள் ஊரில் சுற்றிக் கொண்டு இருப்போம். ஆனால் இப்போது மியூசியம், பெரிய கோயில், 7-D தியேட்டர், பறவைகள் பூங்கா ஆகிய இடங்களைப் பார்வையிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு எஸ்.பி ஆபிஸில் தஞ்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.