ETV Bharat / state

‘ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பேன்’ - ஸ்டாலின் சூளுரை - திமுக

தஞ்சாவூர்: ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறையில் அடைப்பேன் என திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

mk stalin
author img

By

Published : Mar 21, 2019, 10:47 AM IST

தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம்,

தஞ்சை சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பேன் என்றும், யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டேன் என்றும் பேசினார்.

மேலும், கடந்த காலங்களில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல் வரும் காலத்திலும் ஆட்சி அமைந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும், அதிமுக அரசு ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம்,

தஞ்சை சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பேன் என்றும், யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டேன் என்றும் பேசினார்.

மேலும், கடந்த காலங்களில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல் வரும் காலத்திலும் ஆட்சி அமைந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும், அதிமுக அரசு ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மார்ச் 20



திமுக ஆட்சிக்கு வந்த உடன் அடுத்த விணாடி ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை உள்ளே அனுப்புவது தான் முதல் வேலை. மரணத்திற்கு காரணமானவர்களை யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் சும்மா விடமாட்டேன்.



தஞ்சை திலகர் திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் பழநி மாணிக்கம், ராமலிங்கம்
தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் டிகேஜி.நீலமேகம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
ஸ்டாலின் பேச்சு :
திமுக வேட்பாளர் களுக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன். கட்சியில் பல்வேறு பதவிகள் இருந்தாலும் கலைஞர் மகனாக வந்ததில் பெருமை கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் சரியான நேரத்தில் வந்துள்ளது மோடியை வீட்டுக்கு அனுப்புவதற்கு. ஆனால் 18 தொகுதிகளுக்கு இடை தேர்தல் வர காரணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனுக்கொடுத்தனர் அவர்கள் பதவி பறிக்கப்டுகிறது. ஆனால் இந்த ஆட்சி இருக்க கூடாது என கூறிய 11 சட்டமன்ற உறுப்பினர் பதவியில் நீடித்து கொண்டுள்ளனர். அவர்கள் தலைமீது கத்தி தொங்கி கொண்டுள்ளது. அதற்கும் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. 18 தொகுதியோடு 3 தொகுக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. மோடியை வீட்டுக்கு அனுப்பும் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மையும் வீட்டுக்கு அனுப்பும் சூழ்நிலை உள்ளது.தஞ்சையில் உள்ள 3 வேட்பாளர்கள் எனது சகோதரர்கள் எனவே இவர்களும் கருணாநிதியின் பிள்ளைகள் தான் , தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டை பற்றி சிந்திக்காமல் சீரழித்து கொண்டிருக்கிறார்.தஞ்சையில் புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திய போது உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தவர் அப்போதைய முதல்வர் காமராசர். ஆனால் ஐந்து நாட்களுக்கு பிறகு எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்த பிறகு ஹெலிகாப்டரில் வந்தார்கள் ஹெலிகாப்டரை பார்த்து வணக்கம் வைத்தவர் அதில் வந்தார். வந்தும் வாநிலை  சரியில்லை என்று திரும்பி போய் விட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி வரவே இல்லை ஒரு ஆறுதல் கூட கூறவில்லை. ஆனால் தேர்தல் வந்ததால் அடிக்கடி வருகிறார்.ஏழை தாயின் மகன் என கூறும் மோடி தினம் தினம் விதவிதமாக ஆடை உடுத்தி வருகிறார். ராகுலை பிரதமராக அறிவித்து விட்டு மம்தாவை சசந்தித்தற்கு தன்னை ஞாபகம் வைத்து கொண்டு தனக்கு அங்கிகாரம் கொடுத்த அமித்ஷா விற்கு நன்றி.
இதுவரை தேர்தல் அறிக்கையில் சொன்னதை அனைத்தையும் செய்த அரசு திமுக அரசு. ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்  அதிமுக மக்களை ஏமாற்ற தேர்தல் அறிக்கை தாயர் செய்து கொடுத்துள்ளது. இதுவரை நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி போன்ற விஷயங்களில் மக்களை ஏமாற்றி உள்ளது.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை 7 ஆண்டுகளாக நடந்து உள்ளது. ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் அதிமுக ஆனால் அரசு அதை கண்டுபிடிக்காமல் மூடி மறைக்க கூடிய செயலில் ஈடுபட்டு கொண்டுள்ளது. பொள்ளாச்சிக்கு தற்போது நல்ல பெயர் கிடைத்துள்ளது. பொள்ளாத ஆட்சி என்று.திமுக ஆட்சிக்கு வந்த உடன் அடுத்த விணாடி ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை உள்ளே அனுப்புவது தான் முதல் வேலை. மரணத்திற்கு காரணமானவர்களை யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் சும்மா விடமாட்டேன் 


Visul reporter app .TN TNJ 02 MARCH 20 DMK STALIN SPEECH THANJAVUR 7204324
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.