ETV Bharat / state

கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை

author img

By

Published : Aug 18, 2019, 1:57 PM IST

தஞ்சாவூர்: கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

kallanai

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அமைச்சர்கள் துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ். மணியன் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கப்படும்.

தற்போது நாற்று நடும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. நடவு செய்தபின் தான் அதிக அளவு தண்ணீர் தேவைப்படும்.

கல்லணை

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும்.

மேலும், உபரி நீர் கொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.436 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன, என்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அமைச்சர்கள் துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ். மணியன் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கப்படும்.

தற்போது நாற்று நடும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. நடவு செய்தபின் தான் அதிக அளவு தண்ணீர் தேவைப்படும்.

கல்லணை

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும்.

மேலும், உபரி நீர் கொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.436 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன, என்றார்.

Intro:தஞ்சாவூர் ஆகஸ்ட் 17 கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது தூர்வாரும் பணி என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்லனையை திறந்து வைத்தபின் அமைச்சர் காமராஜ் பேட்டி


Body:தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருவாய்த்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீர் பாசனத்திற்காக கல்லணை, காவிரி வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய அணிகளை நீரை திறந்து வைத்தனர் அதன்பின் செய்தியாக இடம் பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் : கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது தூர்வாரும் பணி என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் , டெல்டா மாவட்டங்களில் தேவையான நேரத்தில் தேவையான ஏற்ப தண்ணீர் வழங்கப்படும் தற்பொழுது நாற்று விடும் பணிதான் நடைபெற்றுக் கொண்டுள்ள தால் இதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது நடவு நட்ட பிறகு தான் அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது தூர்வாரும் பணி என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும், உபரி நீர் கொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 436 கோடி இல் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது ஏரி குளங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தண்ணீர் வரத்து பகிர்ந்து அளிக்கப்படும் என்றர்


Conclusion:Tanjore Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.