ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு சாலையோர கடைகள் அமைக்கும் பணி தீவிரம்.. வணிகர்களை ஏமாற்றி வாடகை வசூலித்த கும்பலால் பரபரப்பு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:03 PM IST

Diwali Temporary Shops: கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய சாலைகளின் தீபாவளியை முன்னிட்டு சாலையோர கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் தொடங்கி அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை ஒரு கும்பல் வாடகை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

gang who cheated the roadside traders and collected rent in Thanjavur
தஞ்சாவூரில் சாலையோர வியாபாரிகளை ஏமாற்றி வாடகை வசூலித்த கும்பல்
தஞ்சாவூரில் சாலையோர வியாபாரிகளை ஏமாற்றி வாடகை வசூலித்த கும்பல்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில், போக்குவரத்து மற்றும் வணிகம் நிறைந்த பகுதியாக விளங்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹாஜியார் தெருவில் தொடங்கி, ஆயிகுளம் சாலை, நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சிப்பிள்ளையார் கோயில், பொற்றாமரை குளம், மொட்டை கோபுரம் வரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தீபாவளி சமயங்களில் இருபுறமும், தற்காலிகமாக கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வணிகர்களால் அமைக்கப்படும் இந்த கடைகளில் குறைந்த விலையிலான வேட்டி, சேலை, கைலி, நைட்டி, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், துண்டு, போர்வை, கால் மிதியடிகள், கைப்பைகள், காலணிகள், பர்ஸ், பெல்ட்டு, வளையல், தோடு, பொட்டு, செயின் வகைகள், குடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், துரித உணவு கடைகள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு பண்டிகை காலங்களில் கடை அமைத்து வணிகத்தில் ஈடுபடும் இந்த சிறு வணிகர்கள் அனைவரும், தீபாவளி அன்று விடியற்காலை வணிகத்தை முடித்துவிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணப்படுவர். இக்குறுகிய காலத்தில், இவர்கள் கைவசம் உள்ள பெரும் பகுதி பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இங்கு கிட்டும்.

எனவே, அந்த நம்பிக்கையில் இங்கு ஆண்டு தோறும் தங்களது குடும்பங்களை மறந்து, சாலையே கதி என காலை முதல் இரவு வரை காத்திருந்து இவர்கள் வணிகம் செய்கின்றனர். இன்னும் சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வந்து, இந்த குறுகிய கால வணிகத்தில் இறங்குகின்றனர். இந்த நிலையில், இவ்வாண்டு மாநகராட்சி பகுதியில் வழக்கம் போல 500 முதல் 750 வரையிலான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது பல கடைகளில் வணிகம் தொடங்கிவிட்டது. நாள் நெருங்க, நெருங்க மேலும் பல கடைகளுக்கு வணிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வணிகர்களை குறி வைத்து ஒரு கும்பல், பந்தல் அமைத்து, அதற்கு ஒளி அமைப்பு ஏற்படுத்தி, இஷ்டம் போல ரூ.5 ஆயிரம் முதல் 30 வரை வாடகை என அச்சத்தையும், அதிர்ச்சியையும் மூட்டி வருகின்றனர்.

வியாபாரிகளும் இதனை நம்பி வந்தாகிவிட்டது என மாற்று பதில் சொல்ல முடியாமல், அவர்களிடம் கேட்ட பணத்தை கொடுத்து இடத்தை பிடித்து கடையை போட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, தீபாவளி தற்காலிக கடைகளுக்காக, மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு தொகையும் வசூலிக்கவில்லை என்று பதில் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தனி கும்பல் ஒன்று திட்டமிட்டு, தீபாவளி பண்டிகையினை கோலாகலமாக கொண்டாடும் வகையில், மாநகராட்சி கஜானாவிற்கு செல்ல வேண்டிய ரூபாய் ஒரு கோடி அளவிலான தொகையினை, தங்களது சொந்த பைகளில் போட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே, இந்த கும்பல் யார் என்பதனை மாநகராட்சி நிர்வாகமும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் கண்டறிந்து, அந்த கும்பலிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையினை மீட்டு, அதனை மாநகராட்சி கஜானாவில் முறைப்படி சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து, தற்போது கும்பகோணம் மாநகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஓங்கி ஒலிக்கிறது.

இதையும் படிங்க: சொத்து கேட்டு டார்ச்சர் செய்ததால் மருமகள் கொலை..! போலீசில் சரணடைந்த மாமனார்!

தஞ்சாவூரில் சாலையோர வியாபாரிகளை ஏமாற்றி வாடகை வசூலித்த கும்பல்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில், போக்குவரத்து மற்றும் வணிகம் நிறைந்த பகுதியாக விளங்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹாஜியார் தெருவில் தொடங்கி, ஆயிகுளம் சாலை, நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சிப்பிள்ளையார் கோயில், பொற்றாமரை குளம், மொட்டை கோபுரம் வரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தீபாவளி சமயங்களில் இருபுறமும், தற்காலிகமாக கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வணிகர்களால் அமைக்கப்படும் இந்த கடைகளில் குறைந்த விலையிலான வேட்டி, சேலை, கைலி, நைட்டி, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், துண்டு, போர்வை, கால் மிதியடிகள், கைப்பைகள், காலணிகள், பர்ஸ், பெல்ட்டு, வளையல், தோடு, பொட்டு, செயின் வகைகள், குடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், துரித உணவு கடைகள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு பண்டிகை காலங்களில் கடை அமைத்து வணிகத்தில் ஈடுபடும் இந்த சிறு வணிகர்கள் அனைவரும், தீபாவளி அன்று விடியற்காலை வணிகத்தை முடித்துவிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணப்படுவர். இக்குறுகிய காலத்தில், இவர்கள் கைவசம் உள்ள பெரும் பகுதி பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இங்கு கிட்டும்.

எனவே, அந்த நம்பிக்கையில் இங்கு ஆண்டு தோறும் தங்களது குடும்பங்களை மறந்து, சாலையே கதி என காலை முதல் இரவு வரை காத்திருந்து இவர்கள் வணிகம் செய்கின்றனர். இன்னும் சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வந்து, இந்த குறுகிய கால வணிகத்தில் இறங்குகின்றனர். இந்த நிலையில், இவ்வாண்டு மாநகராட்சி பகுதியில் வழக்கம் போல 500 முதல் 750 வரையிலான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது பல கடைகளில் வணிகம் தொடங்கிவிட்டது. நாள் நெருங்க, நெருங்க மேலும் பல கடைகளுக்கு வணிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வணிகர்களை குறி வைத்து ஒரு கும்பல், பந்தல் அமைத்து, அதற்கு ஒளி அமைப்பு ஏற்படுத்தி, இஷ்டம் போல ரூ.5 ஆயிரம் முதல் 30 வரை வாடகை என அச்சத்தையும், அதிர்ச்சியையும் மூட்டி வருகின்றனர்.

வியாபாரிகளும் இதனை நம்பி வந்தாகிவிட்டது என மாற்று பதில் சொல்ல முடியாமல், அவர்களிடம் கேட்ட பணத்தை கொடுத்து இடத்தை பிடித்து கடையை போட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, தீபாவளி தற்காலிக கடைகளுக்காக, மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு தொகையும் வசூலிக்கவில்லை என்று பதில் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தனி கும்பல் ஒன்று திட்டமிட்டு, தீபாவளி பண்டிகையினை கோலாகலமாக கொண்டாடும் வகையில், மாநகராட்சி கஜானாவிற்கு செல்ல வேண்டிய ரூபாய் ஒரு கோடி அளவிலான தொகையினை, தங்களது சொந்த பைகளில் போட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே, இந்த கும்பல் யார் என்பதனை மாநகராட்சி நிர்வாகமும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் கண்டறிந்து, அந்த கும்பலிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையினை மீட்டு, அதனை மாநகராட்சி கஜானாவில் முறைப்படி சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து, தற்போது கும்பகோணம் மாநகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஓங்கி ஒலிக்கிறது.

இதையும் படிங்க: சொத்து கேட்டு டார்ச்சர் செய்ததால் மருமகள் கொலை..! போலீசில் சரணடைந்த மாமனார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.