ETV Bharat / state

தஞ்சையில் தாண்டவமாடும் கரோனா பாதிப்பு - ஒரே நாளில் 167 நபர்களுக்கு தொற்று உறுதி!

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஆக.1) ஒரே நாளில் 167 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Aug 1, 2020, 10:21 PM IST

தஞ்சையில் தாண்டவமாடும் கரோனா பாதிப்பு - ஒரே நாளில் 167 நபர்களுக்கு தொற்று உறுதி!
தஞ்சையில் தாண்டவமாடும் கரோனா பாதிப்பு - ஒரே நாளில் 167 நபர்களுக்கு தொற்று உறுதி!

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் 21ஆவது இடத்தில் உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சையின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 1) ஒரே நாளில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

குறிப்பாக, அதிக பாதிப்புள்ள பகுதியான திருப்பரங்குன்றம், மேலூர், செல்லூர், பரவை போன்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த மருத்துவ முகாம்களில் ஏறத்தாழ 2 ஆயிரம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 167 நபர்களிடம் சிறு அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

தஞ்சையில் கரோனா தொற்றின் காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 915 பேர் பாதிக்கப்பட்டும், 28 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது 993 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிறப்பு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதே போல, ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 288 வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் 21ஆவது இடத்தில் உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சையின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 1) ஒரே நாளில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

குறிப்பாக, அதிக பாதிப்புள்ள பகுதியான திருப்பரங்குன்றம், மேலூர், செல்லூர், பரவை போன்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த மருத்துவ முகாம்களில் ஏறத்தாழ 2 ஆயிரம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 167 நபர்களிடம் சிறு அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

தஞ்சையில் கரோனா தொற்றின் காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 915 பேர் பாதிக்கப்பட்டும், 28 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது 993 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிறப்பு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதே போல, ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 288 வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.