தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் (45). இவரது சொந்த ஊர் உத்தமபாளையம். இவர் கடந்த சில ஆண்டுகளாக பட்டுக்கோட்டையில் தங்கியிருந்து ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று (நவ. 04) மாலை அதிராம்பட்டினம் அருகேவுள்ள முடுக்குக்காடு பகுதியில் வின்சென்ட் கை, தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிராம்பட்டினம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியார் கொலை: மருமகனுக்கு ஆயுள் தண்டனை!