ETV Bharat / state

நான்கு வருடங்களுக்கு பிறகு கடைமடையை தொட்ட காவிரி நீர்! - நான்கு வருடங்களுக்கு பிறகு கடைமடையை எட்டிய காவிரி நீர்

தஞ்சாவூர்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடைமடையை காவிரி நீர் எட்டியதால் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்து முடித்துவிட முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

delta district
author img

By

Published : Nov 2, 2019, 11:54 PM IST

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு வரும் காவிரி நீரை நம்பி மூன்றுபோகம் விவசாயம் செய்து வந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் கனவு நீராக மாறியது. மழையும் கைவிட்டதால், மூன்றுபோகம் ஒருபோகமானது. இதனால் தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில் விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்து போனது.

கடைமடையை எட்டிய காவிரி நீர்

மழை நீரை நம்பி மட்டுமே ஒருசில இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர். இந்நிலையில் நான்காண்டிற்கு பிறகு கடைமடை பகுதியை காவரி நீர் சேர்ந்ததால் பட்டுக்கோட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கியுள்ளனர்.

உரிய நேரத்தில் காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு வந்துள்ளதால் சம்பா சாகுபடியை செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பி பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு வரும் காவிரி நீரை நம்பி மூன்றுபோகம் விவசாயம் செய்து வந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் கனவு நீராக மாறியது. மழையும் கைவிட்டதால், மூன்றுபோகம் ஒருபோகமானது. இதனால் தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில் விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்து போனது.

கடைமடையை எட்டிய காவிரி நீர்

மழை நீரை நம்பி மட்டுமே ஒருசில இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர். இந்நிலையில் நான்காண்டிற்கு பிறகு கடைமடை பகுதியை காவரி நீர் சேர்ந்ததால் பட்டுக்கோட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கியுள்ளனர்.

உரிய நேரத்தில் காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு வந்துள்ளதால் சம்பா சாகுபடியை செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!

Intro:4 வருடங்களுக்கு பிறகு கடைமடையை எட்டிய காவிரி நீர் - சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்


Body:பொதுவாக டெல்டா மாவட்டங்களில் தஞ்சை மாவட்டம் நெற்களஞ்சியம் என போற்றப்படும் பகுதியாகும். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பட்டுக்கோட்டை ,பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ,அதிராம்பட்டினம் ,மதுக்கூர் உள்ளிட்ட நகர் பகுதியிலும் மேலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம புறங்களிலும் உள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை ஒட்டி வரும் நிலையிலுள்ளவர்கள் ,இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெற வேண்டுமென்றால் காவிரி ஆற்று நீர் வந்தால் மட்டுமே முழுமையான விவசாயத்தை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது ,ஆனால் கடந்த 4 வருட காலமாக பட்டுக்கோட்டை மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகள் கடைமடை பகுதி என்பதால் காவிரி நீர் இப்பகுதிகளுக்கு வந்து சேரவில்லை .இதனால் மழை நீரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விவசாய ஆரம்ப பணிகள் முடிந்து சில நாட்களில் ஏரி குளம் உள்ள மழைநீரும் தீர்ந்து போகவே அதற்குப் பிறகு முழுமையான விவசாயத்தை செய்யமுடியாமல் ஆரம்பகட்ட பணிகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து முடித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு விவசாயியும் தண்ணீர் இல்லாததால் செலவு செய்த தொகையும் உழைப்பும் வீணாகி வருவது கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடைமடை பகுதிகளுக்கு காவிரியாறு நீர் முறையாக வந்து சேர்ந்தது. இதனால் பெரும்பாலான ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு விவசாய பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த வருடம் முழுமையான சம்பா சாகுபடியை செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ள இப்பகுதி விவசாயிகள் பயிரில் கதிர் முற்றும் நிலைவரை இன்னும் சில தினங்களுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தால் இந்த வருடம் முழுமையான சம்பா சாகுபடியை செய்துவிட முடியும் என்கின்றனர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.