ETV Bharat / state

"ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை முதலமைச்சர் என நினைத்து எல்லை மீறுகிறார்" - வைகோ விளாசல்!

Vaiko: தமிழக ஆளுநர் தேவையற்ற வேலைகளை செய்து வருவதாகவும், ஆளுநர் பொறுப்பிற்கு அவர் தகுதியில்லாதவர் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 4:47 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ
வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சியில் ரூ.5 கோடியே 66 லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கலந்து கொண்டார்.

மேலும், இதனையடுத்து திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 'நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி' நடைபெற்றது. இதனை வைகோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக இருப்பதால், அவர்களை காலி செய்யும் நோக்கில் கலவரம் செய்ய நினைக்கிறது. பதிலுக்கு பதில் கலவரம் என்ற வகையில் அமைந்தால் அது தமிழகத்துக்கு நன்றாக இருக்காது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை, கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனை மீறி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காததை கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: “பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக ஆளுநர் தேவையற்ற வேலைகளை செய்து வருவதாகவும், தமிழக ஆளுநர் பொறுப்பிற்கு அவர் தகுதியில்லாதவர் எனவும், ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென 50 லட்சம் கையெழுத்துக்களோடு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்து விட்டதாகவும் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை முதலமைச்சர் என நினைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லை மீறிவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்ப அரசாணை பிறப்பிக்க வேண்டும் - தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை!

வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சியில் ரூ.5 கோடியே 66 லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கலந்து கொண்டார்.

மேலும், இதனையடுத்து திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 'நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி' நடைபெற்றது. இதனை வைகோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக இருப்பதால், அவர்களை காலி செய்யும் நோக்கில் கலவரம் செய்ய நினைக்கிறது. பதிலுக்கு பதில் கலவரம் என்ற வகையில் அமைந்தால் அது தமிழகத்துக்கு நன்றாக இருக்காது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை, கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனை மீறி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காததை கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: “பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக ஆளுநர் தேவையற்ற வேலைகளை செய்து வருவதாகவும், தமிழக ஆளுநர் பொறுப்பிற்கு அவர் தகுதியில்லாதவர் எனவும், ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென 50 லட்சம் கையெழுத்துக்களோடு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்து விட்டதாகவும் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை முதலமைச்சர் என நினைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லை மீறிவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பதற்கு ஏற்ப அரசாணை பிறப்பிக்க வேண்டும் - தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.