ETV Bharat / state

’ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி தகவல் அலுவலர்’

author img

By

Published : Nov 23, 2020, 4:43 PM IST

தென்காசி: தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்திய தகவல் உரிமை ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக மாநில தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

commissioner
commissioner

தென்காசி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் நடைபெற்றது. ஆட்சித்தலைவர் சமீரன் முன்னிலையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் மற்றும் ஊடகத்துறையில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் பொருட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், ”தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பொது தகவல் அலுவலர்கள் மூலம் நேரடியாக தீர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

’ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி தகவல் அலுவலர்’

தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்காத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையிடும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்தும், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தகவல் அலுவலரை நியமிக்கக் கோரியும் இந்திய தகவல் உரிமை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது “ என்று கூறினார்.

இதையும் படிங்க: குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி மோசடி : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் நடைபெற்றது. ஆட்சித்தலைவர் சமீரன் முன்னிலையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் மற்றும் ஊடகத்துறையில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் பொருட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், ”தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பொது தகவல் அலுவலர்கள் மூலம் நேரடியாக தீர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

’ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி தகவல் அலுவலர்’

தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்காத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையிடும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்தும், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தகவல் அலுவலரை நியமிக்கக் கோரியும் இந்திய தகவல் உரிமை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது “ என்று கூறினார்.

இதையும் படிங்க: குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி மோசடி : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.