ETV Bharat / state

நெல்லையில் ரேபிட் கிட் சோதனை தொடக்கம்!

author img

By

Published : Apr 20, 2020, 10:03 AM IST

நெல்லை: கரோனா வைரஸ் தொற்றை விரைந்து கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனையை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கிவைத்தார்.

nellai District Collector launched a Rapid Kit test to detect coronavirus infection
nellai District Collector launched a Rapid Kit test to detect coronavirus infection

நெல்லை மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரசால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் அதிகளவு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் கரோனா வைரஸ் சோதனையை உடனடியாக நடத்த அரசு சார்பில் ஆயிரம் ரேபிட் கிட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதையடுத்து, நெல்லை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்துகொண்டு, ரேபிட் கிட் சோதனையைத் தொடங்கிவைத்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் ரேபிட் கிட் சோதனையுடன், பி.சி.ஆர். சோதனையும் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் நேரடி தொடர்பிலிருந்த அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

ரேபிட் கிட் சோதனை தொடக்கம்

அதேபோன்று மாவட்டத்தில் அதிக தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட் பகுதிகளான மேலப்பாளையம், பத்தமடை, நெல்லை டவுன், கோடிஸ்வரன் நகர், களக்காடு, வள்ளியூர், பாளையங்கோட்டை, பேட்டை, கிருஷ்ணாபுரம் ஆகிய ஒன்பது பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் வியாபாரிகளுக்குச் சோதனை நடத்தப்படவுள்ளது" என்றார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கின்போது எவ்வித விலக்கும் அளிக்கப்பட மாட்டது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் தேவை' - பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர்

நெல்லை மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரசால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் அதிகளவு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் கரோனா வைரஸ் சோதனையை உடனடியாக நடத்த அரசு சார்பில் ஆயிரம் ரேபிட் கிட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதையடுத்து, நெல்லை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்துகொண்டு, ரேபிட் கிட் சோதனையைத் தொடங்கிவைத்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் ரேபிட் கிட் சோதனையுடன், பி.சி.ஆர். சோதனையும் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் நேரடி தொடர்பிலிருந்த அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

ரேபிட் கிட் சோதனை தொடக்கம்

அதேபோன்று மாவட்டத்தில் அதிக தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட் பகுதிகளான மேலப்பாளையம், பத்தமடை, நெல்லை டவுன், கோடிஸ்வரன் நகர், களக்காடு, வள்ளியூர், பாளையங்கோட்டை, பேட்டை, கிருஷ்ணாபுரம் ஆகிய ஒன்பது பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் வியாபாரிகளுக்குச் சோதனை நடத்தப்படவுள்ளது" என்றார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கின்போது எவ்வித விலக்கும் அளிக்கப்பட மாட்டது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் தேவை' - பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.