ETV Bharat / state

கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்!

author img

By

Published : Oct 8, 2020, 6:07 PM IST

Updated : Oct 9, 2020, 8:06 AM IST

தென்காசி: இலத்தூர் அருகே இடப்பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை அரிவாளுடன் துரத்தும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்
கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்

தென்காசி மாவட்டம், இடைகால் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி. கூலித் தொழிலாளியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தில் மனை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் துரை, ராசு ஆகியோர் இந்த கட்டுமானப் பணியை மேற்கொள்ளவிடாமல் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இசக்கி இலத்தூர் காவல் நிலையத்தில் இடப் பிரச்னை குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் அடிப்படையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 7) காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டனர்.

இடப்பிரச்னை காரணமாக கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்

இந்த விசாராணையால் ஆத்திரமடைந்த துரை, ராசு ஆகிய இருவரும் தங்கள் மீது புகார் அளித்ததைக் கண்டித்து அவரை அரிவாளால் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக ஊர்மக்கள் தடுத்து நிறுத்தியதால் தவறுகள் நடக்காத வண்ணம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் தகராறு செய்யும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலத்தூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்தகராறு: மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் - பதறவைக்கும் சிசிடிவி!

தென்காசி மாவட்டம், இடைகால் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி. கூலித் தொழிலாளியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தில் மனை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் துரை, ராசு ஆகியோர் இந்த கட்டுமானப் பணியை மேற்கொள்ளவிடாமல் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இசக்கி இலத்தூர் காவல் நிலையத்தில் இடப் பிரச்னை குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் அடிப்படையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 7) காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டனர்.

இடப்பிரச்னை காரணமாக கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்

இந்த விசாராணையால் ஆத்திரமடைந்த துரை, ராசு ஆகிய இருவரும் தங்கள் மீது புகார் அளித்ததைக் கண்டித்து அவரை அரிவாளால் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக ஊர்மக்கள் தடுத்து நிறுத்தியதால் தவறுகள் நடக்காத வண்ணம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் தகராறு செய்யும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலத்தூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்தகராறு: மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் - பதறவைக்கும் சிசிடிவி!

Last Updated : Oct 9, 2020, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.