ETV Bharat / state

பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதி விபத்து - இருவர் பலி!

author img

By

Published : Mar 26, 2021, 10:18 PM IST

வாகன சோதனைக்காக சிவகங்கை மாவட்டம் ஊத்திகுளம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர்

accident
accident

மதுரை: சிவகங்கை மாவட்டம் ஊத்தி குளம் கிராமம் அருகே திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் சாலையோரம் நின்று கொண்டு வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, சிவகங்கையில் இருந்து தாயமங்கலம் நோக்கி வந்த நகரப்பேருந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் மூன்று காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன் சிவகங்கை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். அதேபோல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட காவலர் பாலசுப்பிரமணியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு காவலர் சந்தனகுமாருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

accident
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன்

விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான நாட்டரசன் கோட்டையைச் சேர்நத குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: எகிப்தில் நேருக்கு நேர் ரயில்கள் மோதல்: 32 பேர் உயிரிழப்பு

மதுரை: சிவகங்கை மாவட்டம் ஊத்தி குளம் கிராமம் அருகே திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் சாலையோரம் நின்று கொண்டு வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, சிவகங்கையில் இருந்து தாயமங்கலம் நோக்கி வந்த நகரப்பேருந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் மூன்று காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன் சிவகங்கை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். அதேபோல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட காவலர் பாலசுப்பிரமணியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு காவலர் சந்தனகுமாருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

accident
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன்

விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான நாட்டரசன் கோட்டையைச் சேர்நத குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: எகிப்தில் நேருக்கு நேர் ரயில்கள் மோதல்: 32 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.