மதுரை: சிவகங்கை மாவட்டம் ஊத்தி குளம் கிராமம் அருகே திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் சாலையோரம் நின்று கொண்டு வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, சிவகங்கையில் இருந்து தாயமங்கலம் நோக்கி வந்த நகரப்பேருந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் மூன்று காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன் சிவகங்கை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். அதேபோல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட காவலர் பாலசுப்பிரமணியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு காவலர் சந்தனகுமாருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-svg-flying-guards-accident-script-7208110_26032021201944_2603f_1616770184_1079.jpg)