சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,
'8 வழிச்சாலை தீர்ப்பு ஆளும் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தேர்தலுக்கு பிறகு 8 வழிச்சாலை திட்டத்தை ஆளும் அதிமுக மேல்முறையீடு செய்யும் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சியில் அவர்களை கேள்வி கேட்க முடிந்தது. ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு கூட நமக்கு உரிமை மறுக்கப்படுகின்றது .
தேர்தலுக்கு முன்னர் பெரியார் குறித்து பேசிய எச்.ராஜா இப்போது அதே கருத்தை தேர்தல் பரப்புரையின் போது பேச முடியுமா?. தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என பாஜகவிற்கு இரண்டு முகம் உள்ளது மேலும் எப்போதும் காவி உடை அணியக்கூடிய பாஜகவினர், தேர்தலுக்காக தற்போது தேர்தல் பரப்புரைகளில் வெள்ளை உடை அணிகின்றனர்' என்று கரு. பழனியப்பன் தெரிவித்தார்.