ETV Bharat / state

இரிடியத்துக்காக மூன்றரை கோடியை இழந்தவர் தற்கொலை- உறவினர்கள் சாலை மறியல்

author img

By

Published : Mar 25, 2022, 7:42 PM IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரிடியம் வாங்குவதாக கூறி ரூ.3.5 கோடி கடன் வாங்கி கட்டியவர் ஏமாற்றப்பட்டதால் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உறவினர்கள் அவரது இறப்பிற்கு காரணம் காவல்துறையே எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரிடியத்துக்காக மூன்றரை கோடியை இழந்தவர் தற்கொலை- இரிடியத்துக்காக மூன்றரை கோடியை இழந்தவர் தற்கொலை
இரிடியத்துக்காக மூன்றரை கோடியை இழந்தவர் தற்கொலை- இரிடியத்துக்காக மூன்றரை கோடியை இழந்தவர் தற்கொலை

சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவள்ளி நகரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் நடத்திவரும் நிலையில் இவருக்கு தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த கவுர் மோகன்தாசிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை ராஜீவ் காந்திக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது உறவினர்கள் நண்பர்களிடம் சுமார் ரூ3.5 கோடி பணத்தை கடனாக பெற்ற ராஜீவ்காந்தி அந்தப் பணத்தை கவுர் மோகன் தாசிடம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு பொருளையும் வழங்காமல், பணத்தையும் வழங்காமல் கவுர் மோகன்தாஸ் இழுத்தடித்து செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து ராஜீவ்காந்தி மற்றும் அவரது நண்பர் பூமிநாதன் ஆகியோர் இணைந்து கவுர் மோகன்தாசை அவரது சொந்த ஊரில் இருந்து கடந்திவந்து பணத்தை கேட்டுள்ளனர். கவுர் மோகன்தாசின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி, பூமிநாதன் மீது தேனி மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து கவுர் மோகன்தாசை மீட்டு சென்றுள்ளனர்.

ராஜீவ் காந்திக்கு கடன் வழங்கியவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்து நேற்று முன் தினம் ராஜீவ் காந்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மானாமதுரை காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தி புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து அவரது உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி அன்பு தலைமையிலான காவல்துறையினர் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:குற்றப்பிரிவு போலீஸிடம் எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவள்ளி நகரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் நடத்திவரும் நிலையில் இவருக்கு தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த கவுர் மோகன்தாசிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை ராஜீவ் காந்திக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது உறவினர்கள் நண்பர்களிடம் சுமார் ரூ3.5 கோடி பணத்தை கடனாக பெற்ற ராஜீவ்காந்தி அந்தப் பணத்தை கவுர் மோகன் தாசிடம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு பொருளையும் வழங்காமல், பணத்தையும் வழங்காமல் கவுர் மோகன்தாஸ் இழுத்தடித்து செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து ராஜீவ்காந்தி மற்றும் அவரது நண்பர் பூமிநாதன் ஆகியோர் இணைந்து கவுர் மோகன்தாசை அவரது சொந்த ஊரில் இருந்து கடந்திவந்து பணத்தை கேட்டுள்ளனர். கவுர் மோகன்தாசின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி, பூமிநாதன் மீது தேனி மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து கவுர் மோகன்தாசை மீட்டு சென்றுள்ளனர்.

ராஜீவ் காந்திக்கு கடன் வழங்கியவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்து நேற்று முன் தினம் ராஜீவ் காந்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி மானாமதுரை காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தி புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து அவரது உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி அன்பு தலைமையிலான காவல்துறையினர் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:குற்றப்பிரிவு போலீஸிடம் எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.