சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள காமனேரி காட்டுவளவில் குடியிருக்கும் மாரப்பன். இவரது மகன் லோகநாதன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். அவர் அதே கம்பெனியில் பணிபுரியும் பிரியா என்ற பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், பிரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து குழந்தைகளை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் பழக்கம் எற்பட ஒரு வருடமாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரியா கர்ப்பம் அடைய லோகநாதன், கர்ப்பத்தை கலைத்து விடும்படி பிரியாவிடம் கூறியதாக தெரிகிறது. அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து பிரியாவும் அபார்ஷன் செய்துள்ளார். பின்னர், சில தினங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியா லோகநாதனிடம் வற்புறுத்தியுள்ளார்.
காதலன் வீட்டு முன்பு காதலி தர்னா : காதலன் தலைமறைவு ! இதனையடுத்து, கடந்த மே 1 தேதி லோகநாதன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று இருவரும் கிளம்பியுள்ளனார். அப்பொழுது வரும் வழியில் பிரியாவுடம், உன்னை வீட்டிற்கு அழைத்து சென்றால் ஏதாவது விபரீதம் ஆகிவிடும் பெற்றோரிடம் சம்மதம் வாங்கிவிட்டு உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி ஓமலூர் பஸ் நிலையத்தில் விட்டு சென்றுள்ளார்.வெகுநேரம் கழித்தும் காதலன் வராமல் போனதால் அதிரிச்சியடைந்த பிரியா காதலன் வீட்டை கண்டு பிடித்து வந்துள்ளார்.அப்போது லோகநாதனின் பெற்றோர்கள் , பிரியாவின் ஜாதி பெயரை செல்லி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனார். இது குறித்து, மேச்சேரி காவல் நிலையத்தில் பிரியா புகார் அளிக்க இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி நஷ்ட ஈடாக லோகநாதனிடம் 1.5 லட்சம் ரூபாய் பேரம் பேசி வெரும் 10ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தாக கூறப்படுகிறது. பணம் எதுவும் தனக்கு வேண்டாம் காதலனை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து மேச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான லோகநாதனை தேடி வருகின்றனர்.
காதலன் வீட்டு முன்பு காதலி தர்னா : காதலன் தலைமறைவு!
சேலம் (16.05.2019): காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டி, சேலம் அடுத்த மேச்சேரியில் , காதலன் வீட்டு முன்பு, காதலி தர்னா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள காமனேரி காட்டுவளவில் குடியிருக்கும் மாரப்பன் மகன் லோகநாதன் என்பவர் டிப்ளமோ படிப்பை முடித்து விட்டு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், அதே கம்பெனியில் பணிபுரியும் புழல் அருகே உள்ள கதிர்வேடு பகுதியை சேர்ந்த ஜாங்கர் என்பவரது மகள் பிரியாவை காதலித்திருக்கிறார்.
ஆனால், பிரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து பெற்றோர்களிடம் குழந்தைகளை விட்டுவிட்டு கம்பெனியில் பணிபுரிந்து வருவதை அறிந்த லோகநாதன் , பிரியா அளித்த உறுதியால் இருவரும் இணைந்து, ஒரு வருடமாக ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில், பிரியா கர்ப்பம் ஆனதை அடுத்து லோகநாதன், கர்ப்பத்தை கலைத்து விடும்படி பிரியாவிடம் கூறியுள்ளார்.
அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து பிரியாவும் அபார்ஷன் செய்துள்ளார்.
தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரியா லோகநாதனிடம் வற்புறுத்தியுள்ளார்.
பின்னர் பிரியாவின் பிடிவாதத்தால் லோகநாதன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறி கடந்த மே 1ந்தேதி சென்னையிலிருந்து பிரியாவை அழைத்து கொண்டு வந்துள்ளார்.
அப்பொழுது வரும் வழியில் அவர் தன்னுடைய காதலியிடம் உடனே தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றால் ஏதாவது விபரீதம் ஆகிவிடும் என கூறி தன்னுடைய பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி வருகிறேன் என்று கூறி ஓமலூர் பஸ் நிலையத்தில் பிரியாவை விட்டு சென்றுள்ளார்.
வெகுநேரம் கழித்தும் காதலன் வராமல் போனதால் அதிரிச்சியடைந்த பிரியா காதலன் வீட்டை கண்டு பிடித்து வந்துள்ளார்.
அப்போது பிரியாவின் ஜாதி பெயரை கூறி லோகநாதனின் பெற்றோர்கள் , அவரை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்தநிலையில் செய்வதறியாது பிரியா மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அப்போது புகாரை பெற்றுக்கொண்டு காவல்துறையினர் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தி நஷ்ட ஈடாக லோகநாதனிடம் 1.5 லட்சம் ரூபாய் பேரம் பேசி பிரியாவிற்கு வெரும் 10ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரியா பணம் எதுவும் எனுக்கு வேண்டாம் எனக்கூறி எனக்கு காதலன்தான் வேண்டும் என புகார் மனுவை வாபஸ் பெற்று கொண்டு திரும்பி வந்து விட்டார்.
இதை தொடர்ந்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மேச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான லோகநாதனை தேடி வருகின்றனர்.