ETV Bharat / state

சாலையில் செல்லும்போதே தீப்பற்றி எரிந்த கார்! - சாலையில் தீப்பற்றி எரிந்து கார் நாசம்

சிவகங்கை: காளையார்கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

car fire
author img

By

Published : Jun 1, 2019, 5:19 PM IST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரண்மனை சிறுவயலைச் சேர்ந்தவர் மஜீத். கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் இவர், தனது காரில் சிவகங்கையிலிருந்து காளையார்கோவில்-கல்லல் சாலை வழியாக தனது ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காலக்கண்மாய் என்ற இடத்தில் காரில் தீப்பற்றியுள்ளது.

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

அதை கவனிக்காமல் சென்றுகொண்டிருந்த மஜீத், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கூறியதையடுத்து காரை நிறுத்தி அதிலிருந்து உடனடியாக வெளியேறி தப்பித்தார். ஒரு இடத்தில் பற்றியிருந்த தீ, சிறிது நேரத்தில் மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு நிலையத்தினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரண்மனை சிறுவயலைச் சேர்ந்தவர் மஜீத். கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் இவர், தனது காரில் சிவகங்கையிலிருந்து காளையார்கோவில்-கல்லல் சாலை வழியாக தனது ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காலக்கண்மாய் என்ற இடத்தில் காரில் தீப்பற்றியுள்ளது.

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

அதை கவனிக்காமல் சென்றுகொண்டிருந்த மஜீத், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கூறியதையடுத்து காரை நிறுத்தி அதிலிருந்து உடனடியாக வெளியேறி தப்பித்தார். ஒரு இடத்தில் பற்றியிருந்த தீ, சிறிது நேரத்தில் மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு நிலையத்தினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை   ஆனந்த்
ஜூன்.01

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பல்


சிவகங்கை அருகே அதிகாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரண்மனை சிறுவயலை சேர்ந்தவர் மஜீத். இவர் கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இன்று இவருக்கு சொந்தமான காரில் சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் -  கல்லல் சாலை வழியாக அரண்மனை சிறுவயல் செல்லும் போது காலக்கண்மாய் என்ற இடத்தில் வரும்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

அவரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கூறியதை அடுத்து காரை நிறுத்தி விட்டு மஜீத் வெளியேறி தப்பித்தார். சிறிது நேரத்தில் காரில் பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. 

சம்பவம் அறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.