ETV Bharat / state

குழந்தையை கொஞ்சிய பெண்... மாயமான தங்கநகை!

சேலம்: குழந்தையைக் கொஞ்சுவது போல் நகையைப் பறித்துத் தப்பிய பெண்ணை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Nov 25, 2019, 6:33 PM IST

சிசிடிவி

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகே சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மேனகா என்ற மனைவியும், சிவாஸ் என்ற 2 வயதுக் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மேனகா குழந்தையை எடுத்துக்கொண்டு சீல்நாயகன்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது, குழந்தையைக் கோவிலின் ஒரு பகுதியில் அமர வைத்துவிட்டு விளக்கு ஏற்ற சென்றுள்ளார். இதைக் கவனித்த அடையாளம் தெரியாத பெண், குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போல், கோவிலின் வெளிப்புறம் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், குழந்தையின் கழுத்திலிருந்த அரை சவரன் தங்க நகையைக் கழற்றிக் கொண்டு குழந்தையை மீண்டும் அமர வைத்துவிட்டுத் தப்பிச்சென்றார்.

அதன்பின், குழந்தையைத் தேடி வந்த மேனகா குழந்தையின் கழுத்திலிருந்த தங்க நகை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மேனகா அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

குழந்தையைக் கொஞ்சுவது போல் நகையைப் பறிததுத் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி

முதல்கட்டமாகக் கோவில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவது போன்றும் பின்னர் குழந்தையிடமிருந்து நகையைக் கழற்றி அந்த பெண் எடுத்துச் செல்வதும் ,பிறகு குழந்தையை அமர வைப்பதும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது .எனவே, அப்பெண் யார் என சீலநாயக்கன்பட்டி, எருமாபாளையம் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் காவல் துறையினர் தேடி வருகிறார்கள் .இப்பெண்ணை பற்றி தகவல் தெரிந்தவர்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல் ஆய்வாளர் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: திருமண உறவை தாண்டிய உறவால் காவலர் எரித்துக் கொலை!

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகே சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மேனகா என்ற மனைவியும், சிவாஸ் என்ற 2 வயதுக் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மேனகா குழந்தையை எடுத்துக்கொண்டு சீல்நாயகன்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது, குழந்தையைக் கோவிலின் ஒரு பகுதியில் அமர வைத்துவிட்டு விளக்கு ஏற்ற சென்றுள்ளார். இதைக் கவனித்த அடையாளம் தெரியாத பெண், குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போல், கோவிலின் வெளிப்புறம் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், குழந்தையின் கழுத்திலிருந்த அரை சவரன் தங்க நகையைக் கழற்றிக் கொண்டு குழந்தையை மீண்டும் அமர வைத்துவிட்டுத் தப்பிச்சென்றார்.

அதன்பின், குழந்தையைத் தேடி வந்த மேனகா குழந்தையின் கழுத்திலிருந்த தங்க நகை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மேனகா அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

குழந்தையைக் கொஞ்சுவது போல் நகையைப் பறிததுத் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி

முதல்கட்டமாகக் கோவில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவது போன்றும் பின்னர் குழந்தையிடமிருந்து நகையைக் கழற்றி அந்த பெண் எடுத்துச் செல்வதும் ,பிறகு குழந்தையை அமர வைப்பதும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது .எனவே, அப்பெண் யார் என சீலநாயக்கன்பட்டி, எருமாபாளையம் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் காவல் துறையினர் தேடி வருகிறார்கள் .இப்பெண்ணை பற்றி தகவல் தெரிந்தவர்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல் ஆய்வாளர் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: திருமண உறவை தாண்டிய உறவால் காவலர் எரித்துக் கொலை!

Intro:குழந்தையை கொஞ்சுவது போல் நகை பறித்து தப்பிய பெண்ணுக்கு வலைவீச்சு.சிசிடிவி காட்சிகளை வைத்து கிராமம், கிராமமாக தனிப்படை போலீசார் தேடுகிறார்கள்.Body:
சேலத்தில் குழந்தையை கொஞ்சுவது போல் நகையை பறித்து தப்பிய பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.


சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ளது எருமாபாளையம்.
இங்குள்ள சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூபதி.
தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மேனகா என்ற மனைவியும், சிவாஸ் என்ற 2 வயது சிறுவனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மேனகா குழந்தையை எடுத்துக்கொண்டு
சீல்நாயகன்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
கோவிலில் சாமியை வணங்கிய மேனகா குழந்தையை கோவிலின் ஒரு பகுதியில் அமர வைத்துவிட்டு தீபவிளக்கு ஏற்ற சென்றார்.
அப்போது குழந்தையை பெண் ஒருவர் எடுத்து கொஞ்சினார். பிறகு கோவிலின் வெளிப்புறம் குழந்தையை எடுத்து சென்று குழந்தையின் கழுத்திலிருந்த அரை சவரன் தங்க நகையை கழற்றி எடுத்துக் கொண்டு குழந்தையை மீண்டும் அமர வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.

குழந்தையை தேடி வந்த மேனகா குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
பின்னர் இதுகுறித்து மேனகா அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில் ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் கோவில் பகுதியில் இருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தனர் .
இதில் பெண் ஒருவர் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவது போன்றும் பின்னர் குழந்தையிடமிருந்து நகையை கழற்றி அந்த பெண் எடுத்துச் செல்வதும் ,பிறகு குழந்தையை அமர வைப்பதும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது .

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்தப் பெண் யார்? என சீலநாயக்கன்பட்டி, எருமாபாளையம் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் காவல் துறையினர் தேடி வருகிறார்கள் .

இந்த பெண்ணை பற்றி தகவல் தெரிந்தவர்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல் ஆய்வாளர் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.