ETV Bharat / state

குடிநீர் குழாய் உடைப்பு! நீரூற்று போல் ஓடும் நீர்

சேலம்: மேட்டூர் - சேலம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author img

By

Published : Jun 23, 2019, 10:40 AM IST

குடிநீர் குழாயில் உடைப்பு நீருற்று போல் பெருகெடுத்து ஓடிய அவலம்

சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ளது சத்திரம் பேருந்து நிலையம். இங்கு இன்று அதிகாலை சேலம் - மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

குடிநீர் குழாயில் உடைப்பு நீருற்று போல் பெருகெடுத்து ஓடிய அவலம்

குடிநீர் குழாய் உடைந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாநகராட்சி அலுவலர்கள் சரி செய்ய வராததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலந்தது. மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சரி செய்யாதது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ளது சத்திரம் பேருந்து நிலையம். இங்கு இன்று அதிகாலை சேலம் - மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

குடிநீர் குழாயில் உடைப்பு நீருற்று போல் பெருகெடுத்து ஓடிய அவலம்

குடிநீர் குழாய் உடைந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாநகராட்சி அலுவலர்கள் சரி செய்ய வராததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலந்தது. மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சரி செய்யாதது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் உடைப்பு. நீரூற்று போல் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது.


Body:சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ளது சத்திரம் பேருந்து நிலையம். இங்கு இன்று அதிகாலை சேலம் மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

குடிநீர் குழாய் உடைந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வராததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலக்கும் அவலம்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அன்றாடம் போராடி வரும் சூழ்நிலை தினந்தோறும் காணமுடிகிறது. சேலம் மாவட்டமும் வறட்சியின் பிடியில் சிக்கி இருப்பதால் ஒரு நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீருக்காக மக்கள் சாலைக்கு வந்து போராடி வருகின்றனர். சேலம் மாநகரில் மட்டும் மேட்டூரிலிருந்து தனி குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீர் மூலம் ஓரளவு பிரச்சினையை தீர்த்து வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் மேட்டூரில் இருந்து ஆத்தூருக்கு தனி குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு செல்லும் பைப் லைனில் சேலம் மாநகராட்சி சத்திரம் பகுதியில் நேற்று நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இரவு 11 மணி அளவில் உடைந்த குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் குபுகுபுவென வெளியேறி வருகிறது. 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை உடைப்பு சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலக்கும் நிலைதான் உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இங்கு ஏராளமான தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. ஆனால் இதை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.