சேலம் மாவட்டம் நலம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது, வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தின் மீது பயங்கர இடி விழுந்துள்ளது. இந்த இடி அதிர்வின் காரணமாக வீட்டிலிருந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இடி விழுந்த தென்னை மரத்தின் அருகில் உள்ள வீட்டில் மின்சாரம் பாய்ந்ததால் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மருத்துவக் கல்லூரி மாணவர் கேசவராஜ், பிரசாந்த் இருவரும் பாதிக்கப்பட்டனர். இதில், பிரசாந்த் என்ற மாணவன் இடி தாக்கி மின்சாரம் பாய்ந்ததில் சுயநினைவு இழந்ததால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடி விழுந்த அதிர்வில் மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதுமையின் பிடியில் சிக்கிய ஆதரவற்ற தம்பதி தற்கொலை!