ETV Bharat / state

பிறந்து 4 நாளே ஆன குழந்தையை விற்க முயற்சி; 3 பேர் கைது

author img

By

Published : Nov 9, 2022, 6:15 AM IST

சேலத்தில் சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த, இடைத்தரகர்கள் இருவர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

சேலம்: திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய ரூ.3 லட்சம் பேரம் பேசப்பட்டு, இளம்பெண்ணின் உறவினர் வளர்மதி என்பவர் மூலம் குழந்தை சேலம் எடுத்து வரப்பட்டு உள்ளது. குழந்தையை வாங்குவதற்கு இன்று (நவ.8) ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோர் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை எடுத்து வந்த வளர்மதியிடம் இருந்து குழந்தையை வாங்கி செல்ல வந்த இடைத்தரகர்கள் லதா மற்றும் அவரது கணவர் இருவரும் குழந்தையைப் பெற முயற்சி செய்யும்போது கையும் களவுமாக மூவரையும் பிடித்தனர். பின்னர், அவர்களிடமிருந்த, பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். அங்கிருந்து குழந்தைகள் நல மையத்தில் குழந்தை பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.

பின்னர் சட்டவிரோதமாக குழந்தையை கடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், லதா மற்றும் அவரது கணவர் இருவரும் தொடர்ந்து குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, மூவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் தூக்கிட்டுக்கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்

சேலம்: திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய ரூ.3 லட்சம் பேரம் பேசப்பட்டு, இளம்பெண்ணின் உறவினர் வளர்மதி என்பவர் மூலம் குழந்தை சேலம் எடுத்து வரப்பட்டு உள்ளது. குழந்தையை வாங்குவதற்கு இன்று (நவ.8) ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோர் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை எடுத்து வந்த வளர்மதியிடம் இருந்து குழந்தையை வாங்கி செல்ல வந்த இடைத்தரகர்கள் லதா மற்றும் அவரது கணவர் இருவரும் குழந்தையைப் பெற முயற்சி செய்யும்போது கையும் களவுமாக மூவரையும் பிடித்தனர். பின்னர், அவர்களிடமிருந்த, பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். அங்கிருந்து குழந்தைகள் நல மையத்தில் குழந்தை பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.

பின்னர் சட்டவிரோதமாக குழந்தையை கடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், லதா மற்றும் அவரது கணவர் இருவரும் தொடர்ந்து குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, மூவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் தூக்கிட்டுக்கொள்கிறேன் - தொடர் சர்ச்சையில் சுகேஷ் சந்திரசேகரின் அடுத்த கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.