ETV Bharat / state

'சேலத்தில் 2020ஆம் ஆண்டுக்குள் ஈரடுக்கு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்' - அதிகாரிகள் தகவல்!

சேலம்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், ஈரடுக்கு பேருந்து நிலையம் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 4, 2019, 8:08 PM IST

salem

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழைய பேருந்து நிலையத்தை புனரமைத்து ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

two layer bus stand works are underway.
ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறும் காட்சி.

தமிழ்நாட்டில் முதல் முறையாக சேலத்தில் அமைய உள்ள இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம் சுமார் 92 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுவதும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

இதையும் படிங்க: சாக்கடை நகரமான சேலம் மாநகரம்! - ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழைய பேருந்து நிலையத்தை புனரமைத்து ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

two layer bus stand works are underway.
ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறும் காட்சி.

தமிழ்நாட்டில் முதல் முறையாக சேலத்தில் அமைய உள்ள இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம் சுமார் 92 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுவதும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

இதையும் படிங்க: சாக்கடை நகரமான சேலம் மாநகரம்! - ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?

Intro:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையம் 2020 இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


Body:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தை புனரமைத்து ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றும் பணியை கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் அமைய உள்ள இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம் சுமார் 92 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் வரும் 2020ஆம் ஆண்டில் இறுதிக்குள் முழுவதும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பேட்டி: சதீஷ், சேலம் மாநகராட்சி ஆணையாளர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.