சேலம்: இளம்பிள்ளை அருகே இலகுவம்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இப்பள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆசிரியர் சந்தோஷ் குமார் என்பவர் பணிபுரிந்துவருகிறார்.
இவர் அப்பகுதி பொதுமக்களிடத்தில் அரசுப் பள்ளியில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் 30 குழந்தைகள் மட்டுமே படித்துவந்த அப்பள்ளியில், தற்போது 160 குழந்தைகள் வரை பயின்றுவருகின்றனர்.
இதன் காரணமாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புனிதம், சந்தோஷ்குமாருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (டிசம்பர் 13) பள்ளிக்கு வந்துள்ளனர்.