ETV Bharat / state

சாலை விபத்துகளில் இறந்தவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

author img

By

Published : Feb 20, 2020, 10:37 PM IST

சென்னை: சேலம், திருப்பூர் சாலை விபத்துகளில் இறந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவித்தார்.

சென்னை: சேலம், திருப்பூர் சாலை விபத்துகளில் இறந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் இன்று இரங்கலை தெரிவித்தார்.
சென்னை: சேலம், திருப்பூர் சாலை விபத்துகளில் இறந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் இன்று இரங்கலை தெரிவித்தார்.

திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிகாலை அவிநாசி அருகே சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் என்னை தொலை பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரின் வருத்தத்தை தெரிவித்தார். மேலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சேலம் விபத்தில் சிக்கிய பேருந்து

அவிநாசி அருகே சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து எர்ணாகுளம் சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது, எதிர்ப்புறமாக கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன் பக்க டயர் வெடித்து மோதியதில், கேரளாவை சோ்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த 23 பேருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தில் உயரிழந்தவர்களின் விவரங்களை உறவினர்களுக்கு தெரிவிக்கவும், உதவி மையம் ஒன்றை ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிடுகிறேன் என்றார்.

மேலும் இதேபோல் இன்று அதிகாலை நடந்த மற்றொரு நிகழ்வில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா பேருந்து ஒன்று, கன்னியாகுமரியிலிருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் நோக்கி சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 24 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார். இரு சாலை விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என் கூறினார்.

இதையும் படிக்க: அவினாசி பேருந்து விபத்து: பாலக்காடு எம்பி நேரில் ஆய்வு

திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிகாலை அவிநாசி அருகே சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் என்னை தொலை பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரின் வருத்தத்தை தெரிவித்தார். மேலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சேலம் விபத்தில் சிக்கிய பேருந்து

அவிநாசி அருகே சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து எர்ணாகுளம் சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது, எதிர்ப்புறமாக கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன் பக்க டயர் வெடித்து மோதியதில், கேரளாவை சோ்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த 23 பேருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தில் உயரிழந்தவர்களின் விவரங்களை உறவினர்களுக்கு தெரிவிக்கவும், உதவி மையம் ஒன்றை ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிடுகிறேன் என்றார்.

மேலும் இதேபோல் இன்று அதிகாலை நடந்த மற்றொரு நிகழ்வில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா பேருந்து ஒன்று, கன்னியாகுமரியிலிருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் நோக்கி சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 24 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார். இரு சாலை விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என் கூறினார்.

இதையும் படிக்க: அவினாசி பேருந்து விபத்து: பாலக்காடு எம்பி நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.