ETV Bharat / state

மோசடி பேர்விழிகளுக்கு போலீஸ் ஆதரவு; நியாயம் கேட்டு வெள்ளி வியாபாரி கதறல்! - காவல்துறையினர்

சேலம்: ரூ. 1.20 கோடி காசோலை மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக வியாபாரி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைகழிக்கும் காவல்துறையினர்
author img

By

Published : Jun 9, 2019, 7:46 PM IST

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் டவுன்பகுதியில் பல ஆண்டுகளாக வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சிவகுமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராவ், சீனிவாசன் ஆகிய இருவரும் தொழில் ரீதியாக ரூ. 1.20 கோடி பணம் கொடுக்க வேண்டிருந்தது. பணத்தை திரும்ப கொடுக்கக்கோரி பலமுறை சிவகுமார், இருவரிடமும் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்தும் ஆறுமாதங்கள் கடந்தும் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் வியாபாரி சிவக்குமார் கூறுகையில், "கிருஷ்ணராவ், சீனிவாசன் ஆகிய இருவரும் ரூ.1.20 கோடி கடனாக வாங்கினர். ஒராண்டாகியும் இதுவரை பணம் திரும்பி வரவில்லை. பணத்தை வாங்கி மோசடி செய்த இருவர் மீது மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மனஉளைச்சலில் இருக்கிறேன். இனிமேலும் பணத்தை பெற்ற தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன்" என்றார்.

மோசடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைகழிக்கும் காவல்துறையினர்
Intro:சேலத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியிடம் 1.20 கோடி ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சேலம் காவல்துறை மறுப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


Body:சேலம் செவ்வாய்பேட்டை யைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சேலத்தில் பல ஆண்டுகளாக வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார் .

இந்த நிலையில் சிவக்குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண ராவ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியது உள்ளது என்று தெரிகிறது.

ஆனால் சிவகுமாருக்கு வரவேண்டிய தொகை கடந்த ஓராண்டுக்கு மேலாக வந்து சேரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த அவர் சேலம் காவல்துறையினரிடம் புகார் அளித்து சீனிவாசன் கிருஷ்ணராவ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த 6 மாதங்களாக அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சேலம் காவல்துறையினர் மறுத்து வருவதாகவும் தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் சிவகுமார் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு சிவக்குமார் அளித்த பேட்டியில் , காசோலை மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன் .

ஆனால் அவர்கள் அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர் .

இதனால் ஆறு மாதமாக மன உளைச்சலில் தவிக்கிறேன் . இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தேன்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எனது புகாரின் மீது உரிய நடவடிக்கை வழக்குப்பதிவு செய்து எடுக்க வேண்டும் என்று சேலம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

ஆனாலும் காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்" என்று கூறினார்.


Conclusion:மேலும் சிவக்குமார் , ' ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க உதவி செய்ய முன் வராவிட்டால், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை' என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.