ETV Bharat / state

முதியவரை குறிவைக்கும் கொலையாளியின் அடுத்த காணொலியால் பரபரப்பு...! - இரண்டு சம்பவமும் ஒரே மாதிரி

சேலம்: பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் முதியவர் அங்கமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Psycho kille
Psycho kille
author img

By

Published : Feb 6, 2020, 12:11 PM IST

சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூரில் உள்ள கடை முன்பு உறங்கிய வடமாநில முதியவர், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் (பிப். 04) வெளியானது.

இதேபோல, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாக பகுதியில் நேற்று முன் தினம் இரவு பழ வியாபாரி அங்கமுத்து என்பவர், தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் .

இந்த இரண்டு சம்பவமும் ஒரே மாதிரி நடந்திருப்பதால் கொலையாளி ஒருவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், இரண்டாவது கொலை சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

முதியவர் அங்கமுத்துவை கொலை செய்த கொலையாளியின் சிசிடிவி காட்சிகள்

இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 10 பேரை கைது செய்த சேலம் மாநகர காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதியோரை குறிவைக்கும் கொலையாளிக்கு போலீஸ் வலை...!

சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூரில் உள்ள கடை முன்பு உறங்கிய வடமாநில முதியவர், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் (பிப். 04) வெளியானது.

இதேபோல, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாக பகுதியில் நேற்று முன் தினம் இரவு பழ வியாபாரி அங்கமுத்து என்பவர், தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் .

இந்த இரண்டு சம்பவமும் ஒரே மாதிரி நடந்திருப்பதால் கொலையாளி ஒருவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், இரண்டாவது கொலை சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

முதியவர் அங்கமுத்துவை கொலை செய்த கொலையாளியின் சிசிடிவி காட்சிகள்

இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 10 பேரை கைது செய்த சேலம் மாநகர காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதியோரை குறிவைக்கும் கொலையாளிக்கு போலீஸ் வலை...!

Intro:சேலம் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் முதியவர் அங்கமுத்து கொலை செய்த கொலையாளியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Body:சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் படுத்து உறங்கும் முதியவர்கள் குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூர் பகுதியில் கடை முன்பு படுத்து உறங்கிய வடமாநில முதியவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது .

இதேபோல நேற்று முன்தினம் நள்ளிரவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாக பகுதியில் பழ வியாபாரி அங்கமுத்து என்பவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் .

இந்த இரண்டு சம்பவமும் ஒரே மாதிரி நடந்திருப்பதால் போலீசார் , கொலையாளி ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் .

இந்த நிலையில் இரண்டாவது கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி காட்சிகள் இன்று போலீசாரால் வெளியிடப்பட்டு உள்ளது.

நள்ளிரவில் முதியவர்கள் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:மிக விரைவில் கொலையாளியை கைது செய்து விடுவோம் என்று சேலம் டவுன் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.