ETV Bharat / state

நானும் மதுரக்காரன் தாண்டா... ஆக்ரோஷமான பவரு!

author img

By

Published : May 3, 2019, 1:36 PM IST

Updated : May 3, 2019, 1:51 PM IST

சேலம்: சினிமாவில் குழந்தைகள் என்னை அதிகம் ரசிக்கிறார்கள் இதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்று நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கலகலப்புடன் பேசியுள்ளார்.

சீனிவாசன்

சேலத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த திரைப்பட நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சியில் ஓராண்டுக்கு முன் சேர்ந்தேன். அதன் பேரில் மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜமானது. மக்கள் தீர்ப்பே இறுதியானது.

மக்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு உள்ளது. நான் டெபாசிட்டிற்கு மேல் ஓட்டு வாங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் வெற்றிபெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன்.

இதற்கு பிறகும் எனது அரசியல் பயணம் தொடரும், அரசியலில் அச்சுறுத்தல், மிரட்டல்கள் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் நான் மதுரக்காரன் என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்தில் புதிய படங்கள் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சினிமாவில் குழந்தைகள் என்னை அதிகம் ரசிக்கிறார்கள். 'பவர் ஸ்டார்' என்ற பெயருக்கும் மக்கள் மத்தியிலும் எனக்கு வரவேற்பு உள்ளது. இதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறினார்

சேலத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த திரைப்பட நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சியில் ஓராண்டுக்கு முன் சேர்ந்தேன். அதன் பேரில் மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜமானது. மக்கள் தீர்ப்பே இறுதியானது.

மக்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு உள்ளது. நான் டெபாசிட்டிற்கு மேல் ஓட்டு வாங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் வெற்றிபெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன்.

இதற்கு பிறகும் எனது அரசியல் பயணம் தொடரும், அரசியலில் அச்சுறுத்தல், மிரட்டல்கள் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் நான் மதுரக்காரன் என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்தில் புதிய படங்கள் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சினிமாவில் குழந்தைகள் என்னை அதிகம் ரசிக்கிறார்கள். 'பவர் ஸ்டார்' என்ற பெயருக்கும் மக்கள் மத்தியிலும் எனக்கு வரவேற்பு உள்ளது. இதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறினார்

சேலம் -03.04.2019



இனிமேல் எனது அரசியல் பயணம் தொடரும் என்றும்,அரசியலில் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன் நான் மதுரைகாரன் என்று திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று தெரிவித்தார்.


சேலத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த 
திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் , செய்தியாளர்களைச்  சந்தித்தார்.

 அப்போது அவர் கூறும்போது,நான், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன் சேர்ந்தேன். அவர் கூறியதன் பேரில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன்.

அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜமானது, களத்தில் இருக்கிறோம், மக்கள் தீர்ப்பே இறுதியானது. நான் நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதி போட்டியிடுகிறேன். 18 லட்சம் மக்களில் 7 லட்சம் பேர் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

தேர்தலில் வெற்றி,தோல்வி என்பது சகஜம். மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது நான் டெபாசிட்டிற்கு  மேல் ஓட்டு பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும் கூறினார். இதற்கு பிறகும் எனது அரசியல் பயணம் தொடரும் என்றும் அரசியலில் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன் நான் மதுரைகாரன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்தில் புதிய படங்கள் வெளியிடுவது தொடர்பான கேள்விக்கு, இணையதளத்தில் புதிய படங்கள் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

 சினிமாவை  குழந்தைகள் என்னை அதிகம் ரசிக்கிறார்கள் மற்றும் பவர் ஸ்டார் என்ற பெயருக்கும்  மக்கள் மத்தியிலும் எனக்கு வரவேற்பு உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் மற்றும் சினிமாவில் நன்றாக நடிக்க வேண்டும் இது இரண்டும் தான், அரசியல் மற்றும் சினிமாவின் பொக்கிஷம் இது இரண்டுமே எனக்கு கிடைத்துள்ளது இதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறினார்.


Last Updated : May 3, 2019, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.