ETV Bharat / state

'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'; பிரம்மாண்ட கோலம்! - சேலம் பெண் குழந்தைகள் தினம்

சேலம்: காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்த பிரம்மாண்டமான விழிப்புணர்வு கோலம் அமைக்கப்பட்டிருந்தது.

author img

By

Published : Jan 24, 2020, 8:36 PM IST

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பெண்கள், பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. அதில், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தினை வலியுறுத்தி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கோலத்தின் மத்தியில் மாவட்ட ஆட்சியர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

national girl child day celebration held in salem
மாவட்ட ஆட்சியர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்

இதை தொடர்ந்து இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது தெரிவித்ததாவது:

"முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுப்படி சேலத்தில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்பு முயற்சியாக சக்தி குழு உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சக்தி குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் வாயிலாக பள்ளிகளில் பயின்று வருகின்ற பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அப்பிரச்னைகளுக்கு பள்ளி அளவில் தீர்வு காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சக்தி குழுவில் காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மகளிர் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் அலுவலர்கள், அங்கன்வாடி குழுக்கள் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் தொடர்ந்து பெண்கள் சாதனைபடைத்து வருகின்றார்கள். அத்தகைய சாதனைகளை படைத்திட உறுதி மொழி ஏற்க வேண்டும். பாலின பாகுபாடு அறிந்து கருக்கலைப்பு செய்வதை முற்றிலும் தடுத்திட வேண்டும். பெண் குழந்தைகளின் விகிதத்தை மேம்படுத்த பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'; பிரம்மாண்ட கோலம்!
சேலத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் தொந்தரவு, கல்வி இடைநிற்றல் ஆகியவை முற்றிலும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடவும், பெண் குழந்தைகள் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிடவும் அரசுத்துறைகளும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் குழந்தைகளை பாராட்டும் விதத்தில் 28 பெண் குழந்தைகளுக்கு “சேலம் தங்க மகள்” விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

national girl child day celebration held in salem
பெண் குழந்தைகளுக்கு சான்றிதழ்

மேலும் சக்தி குழு சிறப்பாக செயல்பட்டுவரும் ஒன்பது பள்ளிகளுக்கு பரிசுகளும், கோலப் போட்டியில் சிறந்த கோலம் இட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகளையும் ஆட்சியர் ராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்பட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க: தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி - தொடங்கிவைத்த எஸ்பி

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பெண்கள், பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. அதில், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தினை வலியுறுத்தி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கோலத்தின் மத்தியில் மாவட்ட ஆட்சியர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

national girl child day celebration held in salem
மாவட்ட ஆட்சியர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்

இதை தொடர்ந்து இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது தெரிவித்ததாவது:

"முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுப்படி சேலத்தில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்பு முயற்சியாக சக்தி குழு உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சக்தி குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் வாயிலாக பள்ளிகளில் பயின்று வருகின்ற பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அப்பிரச்னைகளுக்கு பள்ளி அளவில் தீர்வு காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சக்தி குழுவில் காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மகளிர் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் அலுவலர்கள், அங்கன்வாடி குழுக்கள் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் தொடர்ந்து பெண்கள் சாதனைபடைத்து வருகின்றார்கள். அத்தகைய சாதனைகளை படைத்திட உறுதி மொழி ஏற்க வேண்டும். பாலின பாகுபாடு அறிந்து கருக்கலைப்பு செய்வதை முற்றிலும் தடுத்திட வேண்டும். பெண் குழந்தைகளின் விகிதத்தை மேம்படுத்த பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'; பிரம்மாண்ட கோலம்!
சேலத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் தொந்தரவு, கல்வி இடைநிற்றல் ஆகியவை முற்றிலும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடவும், பெண் குழந்தைகள் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிடவும் அரசுத்துறைகளும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் குழந்தைகளை பாராட்டும் விதத்தில் 28 பெண் குழந்தைகளுக்கு “சேலம் தங்க மகள்” விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

national girl child day celebration held in salem
பெண் குழந்தைகளுக்கு சான்றிதழ்

மேலும் சக்தி குழு சிறப்பாக செயல்பட்டுவரும் ஒன்பது பள்ளிகளுக்கு பரிசுகளும், கோலப் போட்டியில் சிறந்த கோலம் இட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகளையும் ஆட்சியர் ராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்பட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க: தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி - தொடங்கிவைத்த எஸ்பி

Intro:சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம்,
பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மாபெரும் தங்கமகள் விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்
தலைமையில் இன்று நடைபெற்றது.Body:

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:


         மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க, சேலம் மாவட்டத்தில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நம் சமுதாயத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பினை அதிகம் ஏற்படுத்தி கொடுப்பதோடு, பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டாவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜனவரி திங்கள் 24-ஆம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்றையதினம் சேலம் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு தேவையான உரிமைகளையும், அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி அத்தகைய அரசு திட்டங்களின் வாயிலாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி 100 சதவீதம் எட்டமுடியும் என்பதையும், சமுதாயத்தில் உள்ள அனைவரும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காவும், பாதுகாப்பிற்காகவும் பாடுபடவேண்டும் என்பதையும் இதுபோன்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாம் உறுதி செய்திட வேண்டும். அதற்காகத்தான் இவ்விழாவின் தொடக்கத்தில் பெண் குழந்தைகளை காப்பதற்கான உறுதி மொழியினையும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
         மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்பு முயற்சியாக சக்தி குழு உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சக்தி குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் வாயிலாக பள்ளிகளில் பயின்று வருகின்ற பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அப்பிரச்சனைகளுக்கு பள்ளி அளவில் தீர்வு காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்தி குழுவில் காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மகளிர் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி குழுக்கள் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
         சமுதாயம் மற்றும் பொதுமக்களின் மனதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் சமமானவர்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் உருவாக வேண்டும். பெண் குழந்தைகளுக்கும் உரிய வாய்ப்புகளை சமமாக அளித்து அவர்களும் ஆண்களுக்கு நிகர் என்ற ஒரு மனமாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்திட வேண்டும்.
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்றைய தினத்திலிருந்து பெண் குழந்தைகளான உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளை தவர விடாமல் கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமான ஒரு உறுதியான முடிவினை நீங்களே எடுத்திட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளால் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தினை மாற்றிட வேண்டும். பெண்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனைபடைத்து வருகின்றார்கள். அத்தகைய சாதனைகளை நீங்களும் படைத்திட இன்றே உறுதி ஏற்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக இருகின்றது. சேலம் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் உள்ளனர் என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது. ஆனால் 0 முதல் 6 வயதிற்குட்பட்ட 1000 ஆண் குழந்தைகளுக்கு 916 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பாலின பாகுபாடு அறிந்து கருக்கலைiப்பு செய்வதை முற்றிலும் தடுத்திட வேண்டும். பெண் குழந்தைகளின் விகிதத்தை மேம்படுத்த பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்தல், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமையினை முழுமையாக அளித்தல், பெண் கல்வியை உறுதி செய்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும்.
         சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் தொந்தரவு, கல்வி இடைநிற்றல் ஆகியவை முற்றிலும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடவும், பெண் குழந்தைகள் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிடவும் அரசுத்துறைகளும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். பெண் பிள்கைகளாகிய நீங்கள் பெற்றோர்களின் கருத்துக்களையும் ஏற்று நடத்திட வேண்டும். பெண்களாகிய நீங்கள் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்திட மக்களிடம் விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேசினார்கள்.


முன்னதாக, “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” உறுதிமொழியான தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை நான் அறிவேன். இதனால் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் செயல்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் நான் உறுதுனை புரிவேன். கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டு கண்டறியவோ, கருக்கொலை செய்யவோ முயல மாட்டேன். நானும் எனது உறவினர்களும் எனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறப்பிற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும், கல்விக்கும், கண்டிப்பாக எவ்வித பாகுபாடின்றி சமமான மதிப்பு அளித்து உதவி செய்வோம். மேலும், குழந்தை திருமணத்தை தடுப்போம். எளிமையான திருமணங்களுக்கு ஆதரவு அளிப்போம். பெண் குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண்குலம் தழைக்க செய்வோம் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் திரு.சி.அ.ராமன் வாசிக்க துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
         அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் திறமையை ஊக்குவிப்பதற்காகவும் “சேலம் தங்கமகள்” திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டு, பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இன்றைய தினம் கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் குழந்தைகளை பாராட்டும் விதத்தில் 28 பெண் குழந்தைகளுக்கு “சேலம் தங்க மகள்” விருதுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும், சக்தி குழு சிறப்பாக செயல்படுத்திவரும் 9 பள்ளிகளுக்கு பரிசுகளும், கோலப் போட்டியில் சிறந்த கோலம் இட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகளையும் ஆட்சியர் ராமன் வழங்கினார்.


பின்னர், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கையொப்பமிட்டார்கள். மகாத்மா விளையாட்டு மைதானத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தினை வலியுறுத்தி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கோலத்தின் மத்தியில் மாவட்ட ஆட்சியர் .சி.அ.ராமன் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
         

Conclusion:இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார். தலைவர் / மாவட்ட முதன்மை நீதிபதி (இலவச சட்டப் பணிகள்) திரு.எஸ்.குமரகுரு, இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.வளர்மதி, முதன்மை கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) திருமதி.என்.பரிமளாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.ரா.உமாமகேஸ்வரி உட்பட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், சக்தி கைலேஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.