ETV Bharat / state

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து அதிகரிக்கும் நீர் திறப்பு

author img

By

Published : Nov 1, 2020, 1:03 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Mettur dam water level updates
Mettur dam water level updates

சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், தமிழ்நாட்டில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 24ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது.

இதனால் கடந்த ஒரு வார காலமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.70அடியாக குறைந்தது. அதேபோல அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஏழாயிரத்து 113 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளதாகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900கன அடி நீரும் திறக்கப்பட்டு வருவதாகவும் மேட்டூர் அணை பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 64.45 டிஎம்சி ஆக உள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடிக்கு கீழே குறைந்து உள்ளது.

சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், தமிழ்நாட்டில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 24ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது.

இதனால் கடந்த ஒரு வார காலமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.70அடியாக குறைந்தது. அதேபோல அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஏழாயிரத்து 113 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளதாகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900கன அடி நீரும் திறக்கப்பட்டு வருவதாகவும் மேட்டூர் அணை பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 64.45 டிஎம்சி ஆக உள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடிக்கு கீழே குறைந்து உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.