ETV Bharat / state

மலைக்கிராம மக்களைக் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

சேலம்: பல வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தருமாறு மலைக் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி மடுக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சாலைவசதி
author img

By

Published : Jun 7, 2019, 11:43 AM IST

Updated : Jun 7, 2019, 2:37 PM IST

சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு உள்ளிட்ட 67 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவிலூர் மலைக்கிராமம். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்கிராம மக்கள் 30 ஆண்டுகாலமாக சாலை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

மலைக்கிராம மக்களைக் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

இது குறித்து கோவிலூர் கிராம மக்கள் கூறும்போது, ‘எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே குழந்தைகள் பயில முடியும். சரியான சாலை வசதி இல்லாததால் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கல்லூரி படிப்பைத் தொடரவும் இளைஞர்கள் வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

பல வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தருமாறு மலைக்கிராம மக்கள் பல்வேறு போராட்டாங்கள் நடத்தியும் அரசு செவி மடுக்கவில்லை

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது பல கி.மீ. தூரம் கரடுமுரடான சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை சாலை வசதி அமைத்துத் தராததால் புறக்கணித்தோம். அரசு உயர் அலுவலர்களும், தேர்தல் அலுவலரும் அப்போது சாலைவசதி அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால், இன்றுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்தோம். ஆனால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை’ என வேதனையுடன் கூறியுள்ளனர்.

டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் வேளையில் சாலை வசதி கூட கிடைக்கப்பெறாத கோவிலூர் மலைக்கிராமத்தை அரசு கவனிக்குமா?' என தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு உள்ளிட்ட 67 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவிலூர் மலைக்கிராமம். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்கிராம மக்கள் 30 ஆண்டுகாலமாக சாலை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

மலைக்கிராம மக்களைக் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

இது குறித்து கோவிலூர் கிராம மக்கள் கூறும்போது, ‘எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே குழந்தைகள் பயில முடியும். சரியான சாலை வசதி இல்லாததால் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கல்லூரி படிப்பைத் தொடரவும் இளைஞர்கள் வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

பல வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தருமாறு மலைக்கிராம மக்கள் பல்வேறு போராட்டாங்கள் நடத்தியும் அரசு செவி மடுக்கவில்லை

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது பல கி.மீ. தூரம் கரடுமுரடான சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை சாலை வசதி அமைத்துத் தராததால் புறக்கணித்தோம். அரசு உயர் அலுவலர்களும், தேர்தல் அலுவலரும் அப்போது சாலைவசதி அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால், இன்றுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்தோம். ஆனால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை’ என வேதனையுடன் கூறியுள்ளனர்.

டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் வேளையில் சாலை வசதி கூட கிடைக்கப்பெறாத கோவிலூர் மலைக்கிராமத்தை அரசு கவனிக்குமா?' என தெரிவித்துள்ளார்.

Intro:ஏற்காடு அடுத்த கோவிலூர் மலைக் கிராம மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி கேட்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த அரசும் தங்கள் கிராமத்திற்கு தார் சாலை வசதி செய்து தரவில்லை என்றும் கோவிலூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Body:சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்குவது ஏற்காடு. சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு உள்ளிட்ட 67 மலை கிராமங்கள் அமைந்துள்ளன.

சேர்வராயன் மலைத்தொடரில் , மொத்தம் 12 ஆயிரம் ஹெக்டேரில் மட்டும் காஃபி தோட்ட விவசாயம் வெற்றி கரமாக நடக்கிறது. அதற்கு அடுத்தாற்போல் மிளகு, ஆரஞ்சு, பலா, வாழை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகள், சில்வர் ஓக் மரங்கள், தேக்கு மரங்கள், ஆகியவையும் பயிரிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ஏற்காடு மட்டுமே டவுன்ஷிப் அந்தஸ்து வழங்கப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று உள்ளது. ஆனால் மீதம் உள்ள மலைக் கிராமங்களில் குடிநீர் வசதி சாலை வசதி மின்சார வசதி ஆகியவை இன்னும் முழுமையாக இல்லை என்று கூறும் அளவுக்குத் தான் நிலைமை இருக்கிறது.

ஏற்காட்டில் இருந்து 20 கிலோமீட்டரில் அமைந்துள்ளது கோவிலூர் மலைக்கிராமம். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த குக்கிராமத்தின் அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக, நிறைவேற்றப்படவில்லை.

சுதந்திர இந்தியாவில் , தங்களுக்கான முழு விடுதலையை , மத்திய மாநில அரசுகள் இப்போதும் வழங்கவில்லை என்று கோவிலூர் ஊர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மற்ற மலைக் கிராமங்களுக்கு தார்ச்சாலைகள் படிப்படியாக அமைக்கப்பட்ட நிலையில், கோவிலூர் கிராமத்திற்கு மட்டும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தார்சாலை அமைக்கப்படவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏற்காட்டில் இருந்து அரங்கம் செல்லும் வழியில் இடதுபுறமாக மண் சாலை ஒன்று பிரிகிறது. அதுதான் கோவிலூர் செல்லும் சாலை.

தொடக்கம் முதல் ஊருக்குள் நுழைவது வரை கரடுமுரடான கற்கள் நிறைந்த பாதையைத்தான் கோவிலூர் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

கோவிலூர் மக்களின் பிரதான தொழில் விவசாயம் என்றாலும் கால மாற்றத்திற்கு ஏற்ப அவர்களும் பள்ளி , கல்லூரி சென்று கல்வியறிவு பெற்று , சேலம் , பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தர்மபுரி என்று பல்வேறு நகரங்களுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் வாய்ப்பையும் தற்போது, பெற்றிருக்கிறார்கள்.

இந்த கரடுமுரடான பாதை மொத்தம் ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதில் நடந்தே மெயின் ரோட்டிற்கு வந்து பேருந்து பிடித்து ஏற்காடு, சேலம் சென்று படித்து வரும் மாணவர்கள் கிராமத்தில் உள்ளனர். கோவிலூரில் 5 ம் வகுப்பு வரை மட்டுமே அரசுப்பள்ளி உள்ளது என்றாலும் அதற்கு மேல் படிக்க பல கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும் என்பதால் பெண்கள் பலரும் , மேல் கல்வி பெற இயலாமல் தவிக்கின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு , தொடரும் மின்வெட்டு, மருத்துவ வசதியின்மை, ரேஷன் கடை இல்லாதது, சாலை வசதி இல்லாதது என அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடையாத நிலையில், கோவிலூர் மக்களின் வாழ்க்கை இருண்டு போயுள்ளதாக அவர்கள் குமுறுகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு உடல் நலம் இல்லாது போனால் , அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பிரசவ வலியில் ஏற்பட்ட கர்ப்பிணிகள் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.

உடல்நலம் இல்லாதவர்களை தொட்டில் கட்டி தூக்கிச் சென்று ஏழு கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் கொண்டு சென்று தான் மருத்துவமனையில் சேர்க்க வேண்டி இருக்கிறது. பெரும்பாலும் வாழவந்தி மற்றும் ஏற்காடு அரசு மருத்துவமனைகளைத் தான் கோவிலூர் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.

தங்களின் சொல்லொணாத் துயரங்களை குறித்து இ டிவி பாரத்திற்கு கோவிலூர் மக்கள் பிரத்தியேக பேட்டி அளித்தனர். பாஞ்சாலை என்பவர் கூறுகையில், " இங்கே குடிநீர் பிரச்சினை பெரியதாக உள்ளது.

வறட்சி காலத்தில் சேறு கலந்த தண்ணீரையே குடித்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் அதேபோல ஊரில் மருத்துவமனை இல்லை .

விஷப் பூச்சிக் கடி பாதிப்பு ஏற்பட்டாலோ, கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தாலோ அரசு மருத்துவமனைக்குச் செல்ல 10 கிலோ மீட்டர்களை தாண்ட வேண்டியுள்ளது சாலை வசதி இல்லாத நிலையில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம் " என்றார்.

கோவிலூரைச்சேர்ந்த கோபி கூறுகையில், " 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் சாலை வசதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம் . தேர்தல் புறக்கணிப்பு என்று உச்சகட்டமாக கூட போராடியிருக்கிறோம். ஆனால் எதற்குமே தமிழக அரசு செவி சாய்க்காமல் இருக்கிறது.

மிக அண்மையில் எங்களின் தொடர் போராட்டங்களை கேள்விப்பட்டு ஏழு கிலோமீட்டர் தொலைவுள்ள கரடுமுரடான பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி தருகிறோம் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது .

அதற்கென 4 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. ஆனால் இதுவரையில் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை .

இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையையும் துன்பத்தையும் தருகிறது என்றார் வேதனை கொப்பளிக்க.

கல்லூரி செல்லும் மாணவர்கள் கூறும்போது, இரண்டு மாதம் அல்லது நான்கு மாதத்திற்கு ஒருமுறை தான், கல்லூரி விடுமுறையில் , சொந்த ஊருக்கு வந்து பெற்றோரை உறவினர்களை நாங்கள் பார்க்க வேண்டி உள்ளது .

சாலை வசதி இருந்தால் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு தினமும் கூட சென்று வந்து விட முடியும்.

அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை கூட வாடகை வண்டி வைத்து, பெட்ரோல் செலவுக்கு பணம் கொடுத்து பெற வேண்டிய சூழலில் தான் நாங்கள் இருக்கிறோம்" என்கிறனர் ஏக்கத்துடன்.


Conclusion:நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் முழுமை பெறாத வாழ்க்கையை கோவில் ஊர் மக்கள் வாழ்ந்து வருவது அவலத்தின் உச்சம் எனலாம்.

விரைந்து முன்வந்து கோவிலூர் மக்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்துமா தமிழக அரசு?
Last Updated : Jun 7, 2019, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.