ETV Bharat / state

ப்ளாஸ்டிக் பைகள் தயாரித்த நிறுவனத்தை பிடித்த அரசு அலுவலர்கள்!

author img

By

Published : Oct 11, 2019, 11:47 AM IST

சேலம்: பனமரத்துப்பட்டி அருகே அனுமதியின்றி இயங்கிய ப்ளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்த நிறுவனத்தை மூடி அலுவலர்கள் நடவடிக்கை.

பிளாஸ்டிக்

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை செய்யப்பட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி வணிக வளாகங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் அனுமதியின்றி ப்ளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று காலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடமாநிலத்தை சேர்ந்த நேவிசன் என்பவர் தனியாக உள்ள வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் பெரிய இயந்திரங்களை அமைத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பெரிய அளவிலான கேரிபேக் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கேயிருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததோடு கேரி பேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான ரோல்களையும் பறிமுதல் செய்தனர் .

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது சம்பந்தப்பட்டவர் வடமாநிலத்தை சார்ந்தவர் என்பதும் யாருக்கும் தெரியாத வகையில் நிலவாரப்பட்டி பகுதியில் , காலி இடத்தினை வாங்கி அதில், கட்டடம் கட்டி மூன்றாவது மாடியில் யாருக்கும் தெரியாத வகையில் இயந்திரங்களை அமைத்து பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை பிடித்த அரசு அலுவலர்கள்

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அலுவலர்கள் பரிந்துரை செய்தனர். மேலும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிக்கலாமே: நிர்வாண கோலத்தில் காரில் கிடந்த காதலர்களின் சடலங்கள்..! மரணத்திற்கான காரணம் என்ன?

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை செய்யப்பட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி வணிக வளாகங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் அனுமதியின்றி ப்ளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று காலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடமாநிலத்தை சேர்ந்த நேவிசன் என்பவர் தனியாக உள்ள வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் பெரிய இயந்திரங்களை அமைத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பெரிய அளவிலான கேரிபேக் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கேயிருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததோடு கேரி பேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான ரோல்களையும் பறிமுதல் செய்தனர் .

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது சம்பந்தப்பட்டவர் வடமாநிலத்தை சார்ந்தவர் என்பதும் யாருக்கும் தெரியாத வகையில் நிலவாரப்பட்டி பகுதியில் , காலி இடத்தினை வாங்கி அதில், கட்டடம் கட்டி மூன்றாவது மாடியில் யாருக்கும் தெரியாத வகையில் இயந்திரங்களை அமைத்து பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை பிடித்த அரசு அலுவலர்கள்

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அலுவலர்கள் பரிந்துரை செய்தனர். மேலும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிக்கலாமே: நிர்வாண கோலத்தில் காரில் கிடந்த காதலர்களின் சடலங்கள்..! மரணத்திற்கான காரணம் என்ன?

Intro:
பனமரத்துப்பட்டி அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்த நிறுவனத்தை அதிகாரிகள் கண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Body:

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


இதன்படி வணிக வளாகங்கள் கடைகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று காலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடமாநிலத்தை சேர்ந்த நேவிசன் என்பவர் யாருக்கும் தெரியாத வகையில் தனியாக வீடு ஒன்றை வாங்கி மூன்றாவது மாடியில் பெரிய பெரிய இயந்திரங்களை அமைத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பெரிய அளவிலான கேரிபேக் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நிறுவனத்தில் இருந்த 500 கிலோ ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததோடு கேரி பேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான ரோல்களையும்
பறிமுதல் செய்தனர் .

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது சம்பந்தப்பட்டவர் வடமாநிலத்தை சார்ந்தவர் என்பதும் யாருக்கும் தெரியாத வகையில் நிலவரப்பட்டி பகுதியில் , காலி இடத்தினை வாங்கி அதில், கட்டடம் கட்டி மூன்றாவது மாடியில் யாருக்கும் தெரியாத வகையில் இயந்திரங்களை அமைத்து பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.


மேலும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பையும் அதிரடியாக துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் .

Conclusion: சேலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.